தமிழ்நாட்டில் கடுமையான
மின்சார பற்றாக்குறை
நிலவும் இந்த
வேளையில், மத்திய
அரசு உதவ
வேண்டும் என்று
பலமுறை தமிழக
முதலமைச்சர் பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு
கடிதம் மேல்
கடிதம் எழுதியும்
ஒரு கடிதத்திற்கு
கூட மத்திய
அரசிடமிருந்து பதில்
வந்ததில்லை. கூடுதலாக
ஒரு மெகாவாட்
மின்சாரத்தை கூட
அளிக்க மறுத்து
வருகிறது.
கடந்த வாரம் கூட முதலமைச்சர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தில்லி மாநில அரசு மத்திய மின் தொகுப்பிடம் திருப்பி அளிக்கவுள்ள 1721 மெகாவாட் மின்சாரத்தையாவது தமிழ் நாட்டிற்கு ஒதுக்கவேண்டும் என்று கோரியுள்ளார். தங்களிடம் மிகை மின்சாரம் இல்லை என்று வழக்கம்போல் இந்தக் கோரிக்கையும் மத்திய அரசு ஏற்கவில்லை.
கடந்த வாரம் கூட முதலமைச்சர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தில்லி மாநில அரசு மத்திய மின் தொகுப்பிடம் திருப்பி அளிக்கவுள்ள 1721 மெகாவாட் மின்சாரத்தையாவது தமிழ் நாட்டிற்கு ஒதுக்கவேண்டும் என்று கோரியுள்ளார். தங்களிடம் மிகை மின்சாரம் இல்லை என்று வழக்கம்போல் இந்தக் கோரிக்கையும் மத்திய அரசு ஏற்கவில்லை.
ஏற்கனவே பல கடிதங்களை எழுதிய பின்னர் மத்திய அரசு ஒதுக்கிய 100 மெகாவாட் மின் சாரத்தில் மாநிலத்திற்குக் கிடைப்பது என்னவோ வெறும் 78 மெகாவாட் மின்சாரம் தான். தென்மேற்குபருவமழை தவறியதாலும் தென் மண்டல மின்தொகுப்பின் பாதைச் சிக்கல்களா லும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழ்நாடு வாங்கமுடியாத நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். போது மான மின்சாரம் விநியோகம் இல்லாத காரணத் தால் மாநிலத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியே கேள்விக் குறியாக உள்ளது. எனவே மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசின் உதவியில்லாமல் மாநில அரசால் செயல்பட முடியாது.
கடந்த ஓர் ஆண்டாகவே தமிழ்
நாட்டில் மின்சாரத்தை நம்பி தொழில் புரிபவர்களின்
நிலைமையோ மிகவும் மோசமானது, இந்த
மின்பற்றாக்குறையை தமிழ் நாட்டின் பேரிடராக
அறிவித்தால் கூட நல்லது தான்.
மழை, புயல், வெள்ளத்தால் வந்தால்
மட்டும் தான் பாதிப்பா…?
மின் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்புகள் கூட பாதிப்பு தான்.
தொடர்ந்து தமிழ்நாட்டை பல வழிகளில் புறக்கணிக்கும்
மத்திய அரசின் நடவடிக்கை பல
ஐயபாடுகளை கொண்டுள்ளது.
தண்ணீர் கேட்டு கேரளா, கர்நாடகம்,
ஆந்திரா, ஆகிய மூன்று மாநில
கதவுகளை தட்டுகிறோம் எந்த மாநில அரசும்
காது கொடுத்து கேட்க கூட மறுக்கிறது,
உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும்
கூட கரநாடக அரசு கேட்க
மறுக்கிறது.
மத்திய அரசோ, வாய் மூடி,
மௌனியாகவே இருக்கிறது.
எதிர் கட்சி ஆட்சியில் இருக்கிது
என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ந்து
தமிழ் நட்டை மத்திய அரசு
புறக்கணிக்கிறது
எத்தனை மாநிலங்கள், எத்தனை மொழிகள், எத்தனை
இனங்கள், இவை எல்லாம் ஒன்றடக்கியது
தான் இந்தியா.
பிற நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால்
ஓடி ஓடி சென்று உதவும்
நாடு என்ற பேர் கொண்ட
இந்திய நாட்டில் வாழும் ஒரு பகுதியினருக்கு
மின்சாரம் இல்லை,
தண்ணீர் இல்லை,
சகோதரர்களாக பாவிக்க மறுக்கும் மனப்பான்மை
உடையவர்களிடம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் நட்பு,
எங்கள் நாட்டில் உறபத்தியாகும்
மின்சாரம்,
உணவு பொருட்கள்,
வரி
மட்டும் உங்களுக்கு வேண்டும்
அங்கே உபரியாக இருக்கும்
தண்ணீரோ
மின்சாரமோ எங்களுக்கு கிடையாதென்றால்
வேண்டாம் எங்களுக்கு இந்தியா.
பண்பாடோடு நாங்கள் மட்டும் வாழ வேண்டும், அதை பிறரிடம் நாங்கள் எதிர்பார்பது தவறா….