Wednesday, October 31, 2012

இந்த வலி தான் வாழ்க்கை




முயற்சி என்பது
முடிந்தவரை செய்வது இல்லை.
முடியும் வரை செய்வது'!
உங்களால் முடியும்.
முடியும் வரை அதை விடாமல் செய்யுங்கள்
இன்று பல்வேறு சூழ்நிலைகளால் மனிதர்கள்
துக்கம்,
வலி,
வேதனை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவைகளில் இருந்து விம்மிப்புடைத்து வெளியே வர முயற்சிக்காமல் இருந்தால்,
`இந்த வலிதான் வாழ்க்கை' 
என்று ஏற்றுக்கொண்டு வாழ்ந்து,
அப்படியே வாழ்க்கை முடிந்துபோய்விடும்.
ஒரு சிறுவனிடம் ஒரு மீன் தொட்டி இருந்தது.
தொட்டியின் நடுவில் ஒரு கண்ணாடியை வைத்து அதை அவன் இரண்டாக பிரித்தான்.
நடுவில் தடையாக இருந்த கண்ணாடி `டிரான்ஸ்பிரன்ட்' ஆக இருந்ததால்
அது ஒரு தடுப்புபோல் தெரியவில்லை.
அந்த தடுப்பின் ஒரு பக்கம் ஒரு மீன் இருந்தது.
மறுபக்கத்தில் அந்த சிறுவன் உணவை போட்டு கொண்டிருந்தான்.
உணவை பார்த்த மீன் சாப்பிடுவதற்கு பசியுடன் வருகிறது.
ஆனால் உணவு அந்த தடுப்பின் மறுபக்கம் இருந்ததால்,
மீன் அந்த கண்ணாடி தடுப்பில் மீது மோதியது. இப்படியே சில முறை நடந்தது.
பின்பு அந்த சிறுவன், அந்த டிரான்ஸ்பரன்ட் கண்ணாடி தடுப்பை எடுத்துவிட்டு,
மீனுக்கு உணவு போட்டான்.
அந்த மீனோ அருகில் உணவு கிடந்தபோதும்,
தனக்கு அபார பசி இருந்தபோதும்,
கண்ணாடி தடுப்பு நினைவிலே இருந்துகொண்டு,
 `நம்மால் அந்த உணவை எடுக்க முடியாது'
என்ற `நம்பிக்கை'யில், உணவை எடுப்பதற்கான முயற்சியையே எடுக்கவில்லை.
உணவு மிக அருகில் இருந்தும் அதை எடுக்காமல், 
உண்ணாமல் அந்த மீன் இறந்தே போகிறது.
அந்த மீனைப்போல் நாமும் இருக்கவேண்டாம்.
 கண்ணாடி தடுப்புபோன்ற தடைகள் நம் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும்.
அதை நினைத்து நமது சிந்தனையை, செயலை முடக்கி போட்டுவிடக்கூடாது.
தொடர்ந்து முயற்சிக்கவேண்டும். முயற்சித்தால்,
கண்ணுக்கு தெரியாத தடைகள் விலகி,
நமக்கு தெரியாமலே 
அது நமக்கு புதிய வழிகளை உருவாக்கித்தரும்.

Sunday, October 21, 2012

நான்



ஒவ்வொரு நாள் விடியும்போதும், 
இன்றைய நாள் நன்றாக இருக்கும் 
என்று நான் முழுமையாக நம்புகிறேன். 
இன்று நான் மிக அமைதியாக இருப்பேன். 
எந்த சூழ்நிலையாலும், 
எந்த மனிதர்களாலும், 
என் அமைதியை குலைக்க முடியாது. 
இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பேன். 
எந்த சூழ்நிலையாலும், 
எந்த மனிதர்களாலும் என் மகிழ்ச்சியை குலைக்க முடியாது' என்ற உறுதிமொழியுடன் ஒவ்வொரு விடியலையும் வரவேற்றிடுங்கள்.
நமக்கும் பல சக்திகள் இருக்கின்றன. 
ஒவ்வொரு நாளும் ஒரு சக்தியை அடையாளங்கண்டு, மேம்படுத்தி, அதற்கு அதிக பலம் கொடுக்கும் பயிற்சியை பெறுங்கள். 
உங்களிடம் இருக்கும் சக்தியை நீங்கள் அடையாளங்கண்டு, மேம்படுத்தாமல் விட்டுவிடாதீர்கள். 
ஏன் என்றால் உங்களிடம் இருக்கும் பலமிக்க ஆயுதங்களை நீங்களே கண்டறிந்து, 
பயன்படுத்தாவிட்டால் அது உங்களிடம் இருந்து எந்த பலனும் இல்லாமல் போய்விடும்