Wednesday, March 30, 2011

மாத்தி யோசி

இந்தியாவிலேயே ஆச்சரியத்தைக் கொடுக்கும் திறன் ஒருவருக்கு உண்டென்றால், அவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என உறுதியாகச் சொல்லலாம். அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிவதில் முதலிடம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்து.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.

மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு, தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், அதிவேக இனணய தள இணைப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறார். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம். மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள்,என்று கலக்குகுகிறார். மோடி முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.

இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளது. மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறார்கள். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளது.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது

இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் அவர்கள் கவனம் செலுத்துவது தான்.

கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில்,12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இது போன்று நம் மாநிலத்துக்கு ஒரு முதல்வர் கிடைக்காதா, இந்த பாழாய் போன திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வாக்களித்து அவர்கள் அடித்த கொள்ளைகள், சொல்லிமாளாது. இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ன.......? கொஞ்சம் மாத்தி யோசிப்போமே.

Tuesday, March 29, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஏழைகளின் காவலன்
தமிழர்களின் துயர் துடைக்க அவதரித்த திரு. கருணாநிதி,
மணல் கடத்தல்,
அரிசிக் கடத்தல்,
கந்து வட்டிக் கொடுமை ஆகியவற்றை ஒழிக்க
திமுக நடவடிக்கை எடுக்குமாம்.
அப்ப கடந்த 5 ஆண்டுகள் என்ன செய்தார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை இவர் ஆட்சியில் தான் எவ்வளவு கொடுமைகள் நடக்கவில்லை என்று கூறுகிறாரா...?
நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டு,
மீண்டும் வாய்ப்பளித்தால் ஒழிப்பேன் என்று சிறிதும் வெட்கமில்லாமல் கூறுகிறார்.

மணல் கடத்தலைத் தடுத்த அதிகாரிகள் பலர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்தது இந்த ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைகிறார் போல.

இவரது பொன்னான ஆட்சியில் தான்
கைத்தறித் துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா கந்துவட்டிக் கொடுமையிலும்,
மற்றவர்களது சொத்துக்களை அபகரிக்க முயன்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு
அதனாலேயே அவர் அமைச்சர் பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது  இவர் மீதான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பினையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் தலைமறைவானார். 
அவர் மீதான குற்ற வழக்குகள் முடிவு பெறாத நிலையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
குற்றவாளி களை அரவணைப் பதிலும்
ஆதரவு அளிப்பதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு
ஒரு காவல்துறை அதிகாரி குடும்பத்தையே வெட்டிச்சாய்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட உறவினருக்கு சிறைக்குச் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

திமுகவில் கிரிமினல்கள் எந்த அளவிற்கு செல்வாக்குடன் திகழ்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம்.
புதுச்சேரியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.கே. ரமேஷ்,
கருணாநிதியை சந்திக்கும்போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த அளவிற்கு நல்ல மனிதர் அவர் மீது நான்கு கொலை வழக்குகள்,
ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டபோது தலைமறைவாக இருந்த அவர் ஆளுங்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தைரியத்தில் வெளியே வந்தபோதுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நபர்களை அருகில் வைத்துக்கொண்டு
கந்து வட்டியையும் கிரிமினல்களையும் ஒழிப்பேன்
என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது
உண் மையிலேயே வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
கதாசிரியர் என்று பெயரெடுத்தவரின் கதையை,
மக்கள்   வாக்குச்சாவடியில் 
அவரின் கதை (ஆட்சி) முடிவை
எழுத வேண்டும்.  
என்ன தான் நடக்கும் நடக்க்கட்டுமே

Tuesday, March 22, 2011

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்

திமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று அவர்களுக்கு அவர்களே புகழ்மாலை சூட்டிக்கொள்கிறார்கள். இந்தப் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று தமிழக மக்களைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் மின்வெட்டுப் பிரச்சனையால் அவதிப்படும் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு தொழில் துறை யினரும் விவசாயிகளும் இந்த ஆட்சியை ஒரு இருண்ட கால ஆட்சி என்றே கருதுகின்றனர்.

திமுக ஆட்சியிலிருக்கும் வரை மின்வெட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இனிமேல் மின்வெட்டு இருக்காது என்று புதிய புதிய தேதிகளை திமுகவினர் அறிவிக்கின்றனர். ஆனால் ஏற்கெனவே சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் இரண்டு மணி நேர மின்வெட்டு என்பது தற்போது மூன்று மணி நேரம், மூன்றரை மணி நேரம் என்று நீட்டிக்கப்படுவதுதான் கண்டபலன்.

ஒவ்வொரு முறை மின்வெட்டு நீட்டிக்கப்படும் போதும் காற்றடிக்கவில்லை, மழை பெய்யவில்லை என்று புதிய புதிய காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறுகின்றனர். ஆனால் மின்வெட்டைத் தவிர்ப்பதற்கான எந்தவிதத் தொலைநோக்குத் திட்டமும் திமுக அரசிடம் இல்லை என்பது தான் உண்மை.

தற்காலிகத் தீர்வுகளான மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் கோரிப்பெறுவது, அண்டை மாநிலங்களிடம் மின்சாரம் பெறுவது போன்றவற்றையும் கூட முறைப்படி செயல் படுத்துவதில்லை. எவ்வளவுதான் மின்வெட்டு இருந்தாலும் கடைசி நேரத்தில் சில இலவசத் திட்ட அறிவிப்புகள் மூலமும், பணம் மற்றும் அதிகார பலத்தின் மூலமும் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்பதுதான் திமுகவின் கணக்காக உள்ளது.

வாக்களித்த மக்களுக்கு மட்டும்தான் மின் வெட்டு. பன்னாட்டு நிறுவன ஆலைகளுக்கு மின்வெட்டு இல்லை. மின்வெட்டு இருந்தால் அதற்கு அபராதம் என்ற உடன்பாட்டின் அடிப்படையில்தான் பன்னாட்டு நிறுவன ஆலைகள் துவங்கப்படுகின்றன.

மறுபுறத்தில் மின்வெட்டுகாரணமாக சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிறுதொழில் மற்றும் நெசவுத் தொழில் மின்வெட்டினால் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறது.

கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று டோக்கன் வழங்கிக்கொண்டிருப்பது போல விவசாயி களுக்கு இலவச பம்ப்செட் என்ற திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பம்ப் செட் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள், மின் வெட்டினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பதுதான் உண்மை.

தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் பகலில் 3 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் தான் வழங்கப்படுகிறது என விவசாயிகள் குமுறுகின்றனர்.

கோடைக்காலம் உக்கிரமாகத் துவங்கிவிட்ட நிலையில் மின்வெட்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதைச் சமாளிப்பதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மின்வெட்டு, தமிழகத்தில் திமுகவின் அதிகார வெட்டுக்கு வழிவகுக்கும். ஒரு வேளை தி.மு.க ஆட்சியை பிடிக்குமாயின் தி.மு.க. ஜெயித்ததால் தான் சூரியனே ஒளி வீசுகிறது என்று பாராட்டு விழா எடுப்பார்கள் அவர்களின் அடிவருடிகள்,  பண பலம் ஜெயித்தால் விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம் என்று தமிழக மக்கள் வீட்டிற்க்கு வீடு பாடல் கேட்கும்  என்பது மட்டும் உறுதி.