Saturday, November 10, 2012

ஒரு பண்பாடு இல்லை என்றால்




தமிழ்நாட்டில் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவும் இந்த வேளையில், மத்திய அரசு உதவ வேண்டும் என்று பலமுறை தமிழக முதலமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் மேல் கடிதம் எழுதியும்  ஒரு கடிதத்திற்கு கூட மத்திய அரசிடமிருந்து பதில் வந்ததில்லை. கூடுதலாக ஒரு மெகாவாட் மின்சாரத்தை கூட அளிக்க மறுத்து வருகிறது.

கடந்த வாரம் கூட முதலமைச்சர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தில்லி மாநில அரசு மத்திய மின் தொகுப்பிடம் திருப்பி அளிக்கவுள்ள 1721 மெகாவாட் மின்சாரத்தையாவது தமிழ் நாட்டிற்கு ஒதுக்கவேண்டும் என்று கோரியுள்ளார். தங்களிடம் மிகை மின்சாரம் இல்லை என்று வழக்கம்போல் இந்தக் கோரிக்கையும் மத்திய அரசு ஏற்கவில்லை.

ஏற்கனவே பல கடிதங்களை எழுதிய பின்னர் மத்திய அரசு ஒதுக்கிய 100 மெகாவாட் மின் சாரத்தில் மாநிலத்திற்குக் கிடைப்பது என்னவோ வெறும் 78 மெகாவாட் மின்சாரம் தான். தென்மேற்குபருவமழை தவறியதாலும் தென் மண்டல மின்தொகுப்பின் பாதைச் சிக்கல்களா லும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழ்நாடு வாங்கமுடியாத நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். போது மான மின்சாரம் விநியோகம் இல்லாத காரணத் தால் மாநிலத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியே கேள்விக் குறியாக உள்ளது. எனவே மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசின் உதவியில்லாமல் மாநில அரசால் செயல்பட முடியாது.

கடந்த ஓர் ஆண்டாகவே தமிழ் நாட்டில் மின்சாரத்தை நம்பி தொழில் புரிபவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானது, இந்த மின்பற்றாக்குறையை தமிழ் நாட்டின் பேரிடராக அறிவித்தால் கூட நல்லது தான். மழை, புயல், வெள்ளத்தால் வந்தால் மட்டும் தான் பாதிப்பா…?

மின் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்புகள் கூட பாதிப்பு தான்.
தொடர்ந்து தமிழ்நாட்டை பல வழிகளில் புறக்கணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை பல ஐயபாடுகளை கொண்டுள்ளது.
தண்ணீர் கேட்டு கேரளா, கர்நாடகம், ஆந்திரா, ஆகிய மூன்று மாநில கதவுகளை தட்டுகிறோம் எந்த மாநில அரசும் காது கொடுத்து கேட்க கூட மறுக்கிறது,
உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் கூட கரநாடக அரசு கேட்க மறுக்கிறது.
மத்திய அரசோ, வாய் மூடி, மௌனியாகவே இருக்கிறது.
எதிர் கட்சி ஆட்சியில் இருக்கிது என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ந்து தமிழ் நட்டை மத்திய அரசு புறக்கணிக்கிறது

எத்தனை மாநிலங்கள், எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், இவை எல்லாம் ஒன்றடக்கியது தான் இந்தியா.
பிற நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி ஓடி சென்று உதவும் நாடு என்ற பேர் கொண்ட இந்திய நாட்டில் வாழும் ஒரு பகுதியினருக்கு 
மின்சாரம் இல்லை,  
தண்ணீர் இல்லை,   
சகோதரர்களாக பாவிக்க மறுக்கும் மனப்பான்மை உடையவர்களிடம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் நட்பு,
எங்கள் நாட்டில் உறபத்தியாகும்   
மின்சாரம்,  
உணவு பொருட்கள்,  
வரி மட்டும் உங்களுக்கு வேண்டும்  
அங்கே உபரியாக இருக்கும் தண்ணீரோ  
மின்சாரமோ எங்களுக்கு கிடையாதென்றால்  
வேண்டாம் எங்களுக்கு இந்தியா.
பண்பாடோடு நாங்கள் மட்டும் வாழ வேண்டும், அதை பிறரிடம் நாங்கள்  எதிர்பார்பது தவறா.

Sunday, November 4, 2012

என் மனசாட்சி




நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான்.
`ஐயா! 
எனக்கு இன்ன நோய், 
அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்'
என்று கேட்டான். அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான்.
`நல்லது ஐயா!
இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?' என்று கேட்டான் அந்த நோயாளி.
`பத்தியம் வேறொன்றுமில்லை.
லேகியத்தைச் சாப்பிடும் போது,
குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது;
அவ்வளவு தான்!'
என்று மருத்துவன் சொன்னான்.
நடந்தது அவ்வளவுதான்.
பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும்,
எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்;
கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை.
ஏன்?
`குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது'
என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று.
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால்,
இவன் அதை நினைக்கப் போகிறானா?
கிடையாது.
அவன் சொல்லிவிட்ட காரணத்தால்,
மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம்
`குரங்கு, குரங்கு'
என்கிற எண்ணமே வந்தது.
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். 
`ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?' 
என்று கோபத்தோடு கேட்டால், 
`ஐயோ, நான் என்ன செய்வேன்? 
என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்' 
என்கிறான்.
மனது எதற்குக் கேட்கும்? 
யாரிடம் கேட்கும்? 
நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்!
அப்படிக் கேட்டால் தான் உனக்கும் அடங்கியது மனது.
மனதுக்கும் அடங்கியவனல்ல மனுஷ்யன்!
மனுஷ்யனுக்கும் அடங்கியதுதான் மனது.
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? 
மனத்திலே டென்ஷன் இல்லை
நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை.
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது.
சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம்.
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
`என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது
என் மனது இப்படிச் சொல்கிறது'
என்று நாம் அடிக்கடி பேசுவோம்.
மனது சொன்னதை எது கேட்கிறது.
மூளையா, கண்ணா, காதா?
அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது.
ஏன்,
அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு,
உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்' என்று?
`மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்
ஒன்றைய பற்றி யுசலாடுவாய்'
என்றானே பாரதி,
அப்படி ஊசலாடுகின்ற மனதை உடம்புக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது.
கோடை வரலாம்,
வசந்தம் வரலாம்,
பனிக்காலங்கள் வரலாம்,
பருவங்கள் மாறுமே தவிர,
உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட,
உன்னுடைய நிலைமை மாறாது,
மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.
-கவிஞர் கண்ணதாசன்.
என் மனசாட்சி படி நடக்கிறேன்
என் மனசாட்சி படி வேலை செய்கிறேன்
என்று சிலர் சொல்வோம்.
கவிஞர் ஐயா,
உங்க எழுத்து தான் என்றாலும்
இங்கே சிலர் தெ(ரி)ளிந்து கொள்ளவே இந்த பதிவு.