Saturday, August 7, 2010

வாரணம் ஆயிரம்

காட்டு விலங்குகளை வீட்டில் வளர்த்தால் குற்றம்,
விலங்குகளை துன்புறுத்தினால் மிருக வதை தடுப்பு சட்டம், 
புளு கிராஸ் போன்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் நாய், பூனை, உள்ளிட்ட அனைத்து விலங்குகளை பாதுகாக்க இன்னும் பல அமைப்புகள் உள்ளது.
சமீபத்தில் கூட புலிகள் எண்ணிக்கையை வெளியிட்டு அதை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி இருக்கிறது.
இது போக மேனகா காந்தி போன்றவர்கள் மிருக வதைகளுக்கு எதிராக, பலமாக குரல் கொடுத்து வருகிறார்கள் எல்லாம் சரி தான் கோவில்களில் யானைகளை கட்டிப்போட்டு ஆசீர்வதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க வைக்கின்றனரே அதை ஏன் இத்தனை விலங்குகள் பாதுகாவலர்கள், புளு கிராஸ்  அமைப்புகள் கண்டிக்கவில்லை
ஆன்மீகம் என்ற போர்வையில் இவர்கள் செய்வது மிருகவதை இல்லையா.....? 
இல்லை அதில் தலையிட்டால் மதவாதிகள் எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்ற பயமா.....?  
கோடான கோடி உண்டியல் பணத்தில் திளைக்கும் கோவில்கள் ஏன் யானையை வைத்து கேவலமாக பிச்சை எடுத்து வருகிறது....?
ஆத்திகம் பேசும் பெரியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள். 
சென்ற ஆட்சியில் வருடா வருடம் கோவில் யானைகளை சுற்றுலா கூட்டி சென்று ஒரு மாதம் அதை சந்தோச படுத்த பல லட்சம் மக்கள் வரி பணத்தை காலி செய்த கொடுமையும் நடந்துள்ளது.
காட்டில் உள்ள மிருகங்களை பிடித்து வைத்து நாட்டில் இவர்கள் குஷி படுத்துகின்றனராம்.
சமீபத்தில் கூட ஒரு ஆய்வு  கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் சுமார் 300 யானை பாகன்கள் மதம் பிடித்த யானைகள் தாக்குதலில் இறந்துள்ளனர் என்று கூறுகிறது
காட்டு விலங்குகளை பிடித்து வைத்து சித்திரவதை செய்தால் அது மதம் பிடித்து இப்படி தான் செய்யும் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. கேரளாவில் பிரபல குருவாயூர் கோவிலில் மட்டும்  50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக தகவல் அதை பராமரிக்க கோடான கோடி ரூபாய்கள் செலவு செய்கின்றனர். அதில் ஒரு யானைக்கு மதம் பிடித்து 12 ஆண்டுகள் ஆகியுள்ளதாம் அதை இத்தனை வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டியே வைத்துள்ளனர் என்ன கொடுமை இது......
இது எல்லாம் மிருக வதை இல்லையா...?
இதை தட்டிகேட்க ஒரு அமைப்புகளும் இல்லையா....?
அது எல்லாம் போலியான அமைப்புகளா......?  
உங்கள் ஆன்மீகம்  இப்படித்தான் யானைகளை பிடித்து கட்டி போட்டு சித்திரவதை செய்து ஆசீர்வதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க சொல்கிறதா...? விலங்குகளை பாதுகாக்க இத்தனை சட்டங்கள் இருந்தும் என்ன பயன் அவை எல்லாம் யானைகளுக்கு பொருந்தாதா....?
தேசிய விலங்கு புலி என்பதால் அதை மட்டும் பாதுகாக்க நினைக்கிறதா மத்திய அரசு.
கோவில்களில் ஏன் புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகளை வைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டியது தானே ..... ஏன் அது கடித்து விடும் என்று பயமா....
யானைகள் மட்டும் சாதுவான பிராணி என்பதாலா...?
உங்கள் கடவுள் யானைகள் மூலமாக தான் ஆசீர்வாதம் வழங்குவாரா....?
புலி சிங்கம் போன்ற விலங்குகள் மூலம் வரம் தரமாட்டாரா....
இருக்கிற யானைகளை எல்லாம் கொண்டு போய் காட்டில் விட்டு பாருங்கள் அவைகள் படும் சந்தோசத்தை அப்புறம் பாருங்கள் வாரணம் ஆயிரம் படத்தில் இடம் பெற்ற  காதல் பாடல்களை காட்டில் பாடி கொண்டு தன் துணையுடன் ஆடி பாடி திரியும்.
இல்லை நாங்கள் பிச்சை தான் எடுக்க வைப்போம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன் வருங்கால சந்ததிகள் வாரணம் ஆயிரம் என்றெல்லாம் சொல்ல யானைகள் இருக்காது படங்களில் மட்டுமே இருக்கும். 

இந்த பதிவை எழுதி முடித்து யானை படத்தை கூகிளில் தேடும் போது இதை பார்க்க நேர்ந்தது நீங்களும் பாருங்கள்  பார்த்து முடித்து பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் யானைகள் இருக்க வேண்டிய இடம் காடா...? இல்லை நாடா.....?

0 comments: