Tuesday, August 17, 2010

ஆடாத ஆட்டமெல்லாம்

பதவியில் இருந்த போது தமிழர்களை கொன்று குவித்து தமிழர்களின் குருதியில் ராஜபட்சவை மகிழ்வித்த அதே பொன் சேகா  ராஜபட்சவை எதிர்த்ததால் இன்று சிறையில். இலங்கை ராணுவத்தில் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற அதிகாரியாக இருந்த பொன்சேகா. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பின் பதவியில் இருந்து நீக்கப்பட்டு  அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா அரசியலில் இடம் பிடிக்க பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டு.  ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் மீதான புகார் உண்மை என்று உறுதி செய்யப்பட்டு, ராணுவ அந்தஸ்து, பதக்கம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை பறிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும் ஆணையில் அதிபர் ராஜபட்ச சனிக்கிழமை கையெழுத்திட்டார். இதையடுத்து, பொன்சேகா கடந்த 40 ஆண்டுகளில் பெற்ற அனைத்து பதவி உயர்வு, பதக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கௌரவங்களும் பறிக்கப்படுகிறது. கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி என்று சோக பாடல் பாடி கொண்டிருக்கிறார் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை நல்லவன் போல் காட்டிக்கொள்ள பல வாக்குமூலம் அளித்தும், ராஜபட்சவிடம் தோல்வி அடைந்தது தான் மிச்சம், போரின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி வந்தவர்களையும் சுட்டு கொன்று வெற்றி இறுமாப்பில் எத்தனை எத்த்னை உயிர்களை கொன்று குவித்து ராஜபட்சேவை மகிழ்வித்த பொன்சேகா இன்று அதெற்க்கெல்லாம் அனுபவித்து வருகிறார். இவருக்கு சில போலி தமிழ் அமைப்புகளும் ஆதரவு பதவியில் இருந்த போது வீறு நடை போட்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஆடி அடங்கும் வாழ்கையடா என்று கம்பிகளுக்கிடையே சோக நடை நடந்து  கொண்டிருக்கிறார்

0 comments: