Wednesday, August 18, 2010

மோதி விளையாடு

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர் சேவக் 99 ஓட்டம் எடுத்திருந்த நிலையில்,
இவரது சதம் மற்றும் அணியின் வெற்றிக்கும் ஒரு ஓட்டம் மட்டுமே தேவைப்பட்டது.
அந்த நேரத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்திவ், வேண்டுமென்றே "நோ- பால்' வீசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தியா வெற்றிபெற்றது. போட்டி முடிவுக்கு வந்ததால், "நோ பாலில்' அடித்த சிக்சர் வீணாகி, தனது 13வது சதத்தை எட்ட முடியாத சோகத்தில் வெளியேறினார் சேவக்.
இப்பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது.
ரந்திவ் செயலை கிரிக்கெட் உலகம் கண்டித்துள்ளது.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) சார்பில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கப் பட்டுள்ளது.
அட இந்த அரசியல்வாதிகள் தான்  எதிர் கட்சியை வீழ்த்துவதற்க்கு பல குள்ள நரி வேலை, குறுக்கு வழிகளை கையாள்வார்கள்.
ஆனால் இது
விளையட்டல்லவா....?
இதிலுமா.....?
வீளையாட்டில் இவ்வளவு விரோத போக்கோடு விளையாட வேண்டுமா
இரு நாடுகள் நட்புறவு மேலோங்கத்தான் இது போன்ற விளையாட்டுகள் நடத்தபடுகின்றன
ஆனால் இங்கே நடப்பது என்ன....?
ஏதோ இரு நாடுகள் போரிட்டு கொள்வது போல மோதி கொள்கிறார்கள்
இது இரு நாட்டு மக்களிடையே பகைமை உணர்வை தான் வளர்க்கும். விளையாட்டு வீரர்கள் போர் வீர்கள் அல்லவே...
விளையாட்டு வீரர்கள் வெற்றி தோல்வி இரு நிலைகளையும் சமமாக பாவிக்க வேண்டும்
வெற்றி பெற்றால் ஆனந்த கூத்தாடுவது,
தோல்வியுற்றால் துவண்டுவிடுவது பிறகு,
எதிரணியினரை திட்டுவது,
சக வீரர்களை குறை சொல்வது,
நடுவர்களை குறை சொல்வது,
தரகுறைவாக மைதானங்களில் நடந்து கொள்வது,
இது பொன்ற செயல்கள் தொடர்வதால் பகைமை உணர்வு தான் வளரும். அணியை வழி நடத்துபவர்கள் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்
இது போன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது,
விளையாட்டில் மோதும் இரு அணிகளும் சகோதர உணர்வுடன் விளையாடி இரு நாடுகளுக்கும் சகோதர உணர்வை வளர்க்க வேண்டும்
அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்
அதை விடுத்து மோதி விளையாடு என்று விளையாட கூடாது.

0 comments: