Saturday, August 14, 2010

நான் அவன் இல்லை

போபால் விஷ வாயு வழக்கு தொடர்பான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்த வேளையில் பாராளுமன்றத்தில் ஒரு வழியாக உள்துறை அமைச்சர் அனைத்திற்க்கும் பதில் அளித்து விட்டார்.

2001ல் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அப்போதே இந்த கேள்வியை கேட்டிருந்தால், அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் எளிதாக விடை கிடைத்திருக்குமாம். ஆன்டர்சனை கைது செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது அப்போதைய மாநில முதல்வராக இருந்த அர்ஜுன் சிங் இது தொடர்பாக அவர் ராஜிவ் உட்பட யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லையாம்.

ஆன்டர்சனை, ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அர்ஜுன் சிங் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லையாம். பத்திரிகைகளிலும் ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியிட்டுள்ளனவாம். இதில் ஆன்டர்சனை தப்பவிட்டதில் ராஜிவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லையாம் ஆன்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்பது தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்தை இதற்கு முன் அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாம்.

விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும். ஆன்டர்சனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி அமெரிக்காவிடம் இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுமென்று சிதம்பரம் திருவாய் மலர்ந்து கூறியுள்ளார்.

ஆண்டர்சன் தப்பியதில் ராஜீவுக்கு தொடர்பில்லையாம் அமெரிக்காவையும் குற்றம் சொல்வது வீன் வேலையாம், ஆண்டர்சன் எப்படி தப்பித்தார் என்றே தெரியாது என்கிறார்

இன்னும் சிறிது நாட்கள் சென்றால் அண்டர்சன் யார் என்றே தெரியாது என்பார் அப்புறம் பாருங்கள் போபால் சம்பவமே நடக்கவில்லை என்று சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை.

யார் தான் அந்த துயர சம்பவத்திற்க்கு பொறுப்பு.....?  
இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்க்கு அரசு பொறுப்பேற்க்க முடியாது என்றால் என்ன அர்த்தம்.........?

ஆட்சியில் உடகார்ந்து கொண்டு மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்கிறார்கள்.
மக்களின் உயிர் இவர்களுக்கு மயிருக்கு சமானம் 
போனால் போகட்டும் போடா என்றே நினைக்கிறார்கள்.
ஒரு நாள் ஆட்சி முடிந்து,
பதவி இழந்து,
அடுத்த முறை ஓட்டு கேட்டு செல்லும் போது யாராவது போபால் தொடர்பாக கேள்வி ஏதாவது கேட்டால் 
 நான் அவன் இல்லை
என்று சொல்லுவார்கள் இந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரர்கள்.