Friday, August 20, 2010

தங்க சூரியனே

இயற்கை வளங்கள் அனைத்தையும்  நம் வசதிக்காக அழித்து பூமியை பாலை வனமாக மாற்றியது தான் மிச்சம் பூமியில் கிடைக்கும் மண், கல், மலைகள், மரங்கள், இப்போ கடல் தண்ணீர் அதையும் பயன் படுத்த தொடங்கியாச்சு அனைத்தையும் கிட்ட தட்ட எல்லாவற்றையும் பயன் படுத்தி விட்டோம். இவை அனைத்துமே திரும்ப பெற முடியாதவை ஆனால் இந்த சூரியனை மட்டும் பயன் படுத்த மறுப்பது ஏனோ....? இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளை களைய வேண்டும்
ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.
சுதந்திர தின விழாவில் விவசயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர். ஏற்கனவே இங்கு மின் பிரச்சனை கடந்த இரண்டு வருடமாக தலை விரித்து ஆடி கொண்டிருக்கிறது அதை தீர்க்க வழியில்லை இதிலே மின் மோட்டார் வேறு இதற்கு மட்டும் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்......? நான் விவசயிகளுக்கு சலுகை தர வேண்டாம் என்று சொல்லவில்லை விவசாயம் தான் உயிர் நாடி. விவசயிகளுக்கும் பயன் இருக்க வேண்டும் அதே நேரத்தில் அரசுக்கும் மின் பிரச்சனையும் இருக்க கூடாது அதற்கு ஒரே வழி பஞ்சாப் போன்ற மாநிலங்களை பின் பற்றுவதில் தவறில்லை அங்கே மின் பிரச்சனை எழுந்த போது விவசயிகளுக்கு சூரிய ஓளி மின் திட்டம் அறிமுக படுத்தபட்டது இந்த திட்டத்திற்க்கான நிதி 40% மாநில அரசும் 40% மத்திய அரசும் 20% விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்த படுகிறது விவசாயிகளுக்கும் தொல்லை இல்லை அரசுக்கும் சுமை இல்லை. கலைஞர் சூரிய ஓளி மின் திட்டம் என்று பெயர் வைத்து செயல்படுத்தினாலும் பரவாயில்லை, உங்கள் கட்சியின் சின்னமும் அதில் இருப்பதால் நீங்கள் பிரச்சாரம் செய்வது எளிதாகி விடும் இது போன்று சூரிய ஓளி திட்டம் தமிழகத்தில் செயல்படுத்த பட்டால் திறந்த மனதுடன் சொல்கிறேன் என் ஓட்டு  நிச்சயம் சூரியனுக்கே விவசாயிகள் ஓட்டும் இதை செயல் படுத்தும் அரசுக்கே என்பதில் சந்தேகம் இல்லை வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதை விட்டு சூரியனை வைத்தே ஓட்டுகள் பெறலாம் தங்க சூரியனே என்று விவசாயிகள் உங்களை அழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

0 comments: