Tuesday, October 5, 2010

ஆடுங்கடா என்னை சுத்தி

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப், தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தான். கசாபுக்கு, மும்பை தனி நீதிமன்றம் கடந்த மே மாதம் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில் அவனுக்கு அருகிலேயே சிறை ஊழியர் ஒருவர் நிறுத்தப்பட்டு உள்ளார், அவனது நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கபட்டு வருகிறது. சிறையில் கசாப் அடிக்கடி வன்முறையில் ஈடுபடுகிறான் என்றும். கடந்த 1ம் தேதி சிறை காவலர்களை கசாப் தாக்கினானென்றும் செய்திகள் வருகின்றது. இது வீடியோ கேமராவிலும் பதிவாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றதை விடியோ ஆதரத்துடன் நிருபிக்கபட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதியை மக்கள் வரிபணத்தை வீணடித்து  அவனுக்கு சொகுசாக பாதுகாப்பு அளித்து வேடிக்கை பார்க்கும் நம் நாட்டு சட்டதிட்டத்தை என்னவென்று சொல்வது குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்காமல் விட்டு ஆடுங்கடா என்னை சுத்தி என்று தீவிரவாதிகளை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசுகளை வைத்து கொண்டு என்ன செய்ய...? 

என் பிற தளங்களையும் பார்வையிடுங்களேன்

எல்லாமே தமாசு



சிவந்த கண்கள்  


சிவப்புரோஜாக்கள்

 

 

0 comments: