Monday, October 4, 2010

புத்தன், ஏசு, காந்தி

சாதி அடிப்படை இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தி தான் எல்லா அரசியல் கட்சி காரங்களும் பேசுறாங்க. சாதியற்ற சமுதாயத்தை காணத்தான் இத்தனை காலமாக பெரியார்லருந்து எத்தனையோ தலைவர்கள், சமூக நல ஆர்வலகள்  காலங்காலமா போராடிகிட்டு இருக்காங்க இந்த அரசியல தொழிலா பண்றவுங்க கிட்ட இருந்து சாதியற்ற சமுதாயம் மலர போவது கிடையாது. மதம் மாறுவதற்கு இடம் அளிப்பது போல், சாதி மாறுவதற்கு இடம் அளிக்க வேண்டும். அரசு என்பது சாதி மதங்களை கடந்த்ல்லாவ இருக்க வேண்டும் இவர்கள சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சரி என்று கூறுவது எந்த வகை நியாயம், வறுமையை ஒழிக்கத் தான் இடஒதுக்கீடுன்னு சொல்றாங்க அப்படி பார்த்தா ஏழைகளுக்கு தானே இடஒதுக்கீடு செய்ய வேண்டும். சாதிகளுக்கு இடஒதுக்கீடு எதுக்கு...? வறுமையில் வாடுபவர்களுக்கு தான் இடஒதுக்கீடு வேண்டும் இல்லை என்றால் சாதியை வைத்து பல பணக்காரங்க தான் சலுகையை அனுபவிக்கிறார்கள் இந்த நிலை எப்போது தான் மாறுமோ....? புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக என்ற பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்ன செய்ய ஏழைக்கு கிடைக்க வேண்டிய சம உரிமைகள் யார் தருவது...?
http://ellamaethamasu.blogspot.com/2010/10/blog-post_04.html

0 comments: