Thursday, October 14, 2010

வாரான் வாரான் பூச்சாண்டி

காமன் வெல்த் போட்டி நிறைவு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இலங்கையில் தமிழ் இன படுகொலைகளை நிகழ்த்திய கொடுங்கோலன் ரத்த வெறி ராஜ பக்க்ஷேவை இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. 

உலகில் பெரும்பாலான நாடுகள் போர் குற்றம் குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த கருத்தை மாற்ற ராஜ பக்க்ஷேவின் நெருங்கிய கூட்டாளியான காங்கிரஸ் அரசு. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதன் மூலம் அந்த கருத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை அடித்து விரட்டியும் சுட்டு கொன்றும் வருகிறது இலங்கை அரசு அந்த குற்றசாட்டுகளை எல்லாம்  புறந்தள்ளி இப்பொழுது அவருக்கு வரவேற்பது தமிழர்கள் மனதில் வேதனை அளிக்கிறது.

இலங்கையில் கொன்று குவித்து வெறி அடங்காமல் தமிழக மீனவர்களையும் வேட்டையாடி வருகிறது இலங்கை அரசு. இதற்கு பல கண்டன குரல்கள் தமிழர்கள் சார்பில் தெரிவித்தும் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் நண்பனை வரவேற்பதிலேயே குறியாக உள்ளது இந்திய அரசு. காஷ்மீர் பிரச்சனைகாக எத்தனை முறை அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கும் அதே தமிழக மீனவர்கள் தாக்கபடுவதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்...? காஷ்மீர் மக்கள் மட்டும் தான் இந்தியர்களா....? தமிழன் இல்லையா....? இந்தியவரை படத்தில் தலை பகுதி துண்டாகாமல் பாதுகாக்கும் சோனியா அரசு வால் பகுதியான தமிழ்நாடு போனால் பரவாயில்லை என்று நினைக்கிறதா தமிழகத்தை ஆளும் அரசு கூட தமிழக மீனவர் பிரச்சனையை கண்டு கொள்வதில்லை.

 தொடர்ந்து தமிழர்களை துச்சம் என நினைக்கும் அரசுக்கு அதற்கான பிரதிபலனை தமிழக மக்கள் தருவார்கள் அது நிச்சியம் நடந்தே தீரும் அதில் மாற்றம் இல்லை. காங்கிரஸ் அரசு வேண்டுமானால் ராஜ பக்க்ஷேவை நண்பேன்டா என்று அழைத்தாலும் எங்கள் வீட்டருகில் இருக்கும் குழந்தைகள் கூட வாரான் வாரான் பூச்சாண்டி என்றே பாடுகிறது. அது ஆள்பவர்களின் காதுகளில் விழுமா.....? 
Stumble This Fav This With Technorati Add To Del.icio.us Digg This Add To Reddit Add To Facebook Add To Yahoo

0 comments: