Monday, August 2, 2010

காந்தி தேசமே

இந்திய ரூபாய்க்கான சர்வதேச குறியீடு வெளியிடப்பட்டது அது பழைய செய்தியாகி போனது நேற்று மதுரையில் நடைபெற்ற கக்கன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் விரைவில் இந்திய ரூபாய் வடிவம் மாறினாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை காங்கிரஸ் அடிபொடிகள் தங்களது ஆர்வ மிகுதியால் இப்படி இந்திய ரூபாய் வடிவத்தை  மத்திய அமைச்சர், அவரது வாரிசு மற்றும் சோனியா, ராகுல் ஆகியோரது  படத்தை போட்டு கேவலப்படுத்தி உள்ளனர் இந்திய தேசிய கொடியை பயன் படுத்துவதற்க்கு பல விதிமுறைகள் உள்ளது போல் ரூபாய் வடிவத்தை பயன்படுத்த விதிமுறை இல்லையா  மத்திய அரசின் முக்கிய அமைச்சராக இருந்து கொண்டு இதை போன்ற மலிவான விளம்பரங்கள் செய்து மகிழ வேண்டுமா எளிமையாக வாழ்ந்து அரசியல் வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த தியாகி கக்கன் அவர்களை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக இததனை லட்சங்கள் ஆடம்பர செலவு செய்து காங்கிரஸ் தலைவர்களை வரவேற்க்க மதுரை முழுவதும் சாலையை மறித்து அலங்கார வளைவுகள், தோரனங்கள் சுவரொட்டிகள் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அவரை கேவலபடுத்துவதாக உள்ளன தேசிய கொடியை அவமதித்திதால் வழக்கு, இந்திய இறையாண்மை பற்றி பேசினால் வழக்கு என்றால் இந்திய ரூபாய் வடிவத்தை தவறாக பயன்படுத்திய மத்திய அமைச்சர் மீது வழக்கு இல்லையா, ஹார்லிக்ஸ் திருட்டு வழக்குக்கே சி.பி.ஐ. விசாரணை கோரும் அம்மையார் இதை ஏன் எதிர்க்கவில்லை ஒரு வேளை கூட்டணி மாறினாலும் மாறும் என்பதற்க்காக விட்டுவிட்டாரா என்ன.....? விழா மேடையில் பேசிய ஒரு தலைவரின் வாரிசு மாணவர்கள் அனைவரும் சத்திய சோதனை புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்ன ஒரு நகைச்சுவை இவர்கள் செய்வதை பார்த்து மக்கள் அமைதியுடன் இருக்கின்றனரே அதே சத்திய சோதனை தான்  காந்தியின் படத்தை  ரூபாய் வடிவத்தில் இருந்து எடுத்து விட்டு தன் படங்களை போட்டு மகிழும் கீழ்த்தர அரசியல் வாதிகள் இவர்கள் எல்லாம் சத்திய சோதனை பற்றி பேசுகிறார்கள் எல்லாம் கால கொடுமை முதலில் உங்கள் கட்சியில் ஒற்றுமையாக இருக்க முயலுங்கள் அப்புறம் ஊருக்கு உபதேசம் செய்யலாம். காந்திதேசமே என்று உலக நாடுகள் நம் நாட்டை புகழ்ந்து தள்ளி கொண்டிருக்க இவர்கள் காந்தியை மதிக்க கூட வேண்டாம் கேவலப்படுத்தாமல் இருந்தால் சரி.  

0 comments: