இன்று நாட்டின் 64ம் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது,
நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது,
டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7 மணிக்கு தேசிய கொடியை
ஏற்றி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறாராம்.
விழாவில், சோனியா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள்,
மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனராம்.
இதையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்தாம்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம்.
செங்கோட்டையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாம்.
இதுதவிர, தீவிரவாதிகளை கண்டதும் சுடுவதற்காக தேசிய கமாண்டோ படை வீரர்களும் செங்கோட்டையின் உயர்ந்த கட்டிடங்களில் நிறுத்தப்படவுள்ளனராம்.
இதுதவிர, விரைவு அதிரடிப்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், கலவரத் தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனராம்.
பிரதமர் மற்றும் தலைவர்கள் உரையாற்றும்போது வானில் ஹெலிகாப்டர்களில் சுற்றியபடிஅதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப் படவுள்ளனராம்.
நாடாளுமன்ற வளாகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்,
தொடர் வண்டி நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், வெளிமாநில பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக டெல்லியின் எல்லைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனராம்.
என்ன நடக்கிறது.....?
இந்திய பிரதமர் வெளி நாட்டில் சென்றா விழா கொண்டாடுகிறார்......?
வருடா வருடம் இதே கேவலமான நிலை தான்.
சுதந்திர தின உறையாற்றும் போது குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டில் நின்று கொண்டு தான் 64 வருட சிறப்பு மிக்க
இந்திய திருநாட்டின் 100 கோடி மக்களுக்குகான தலைவர் பேசுவார்
இவரை பாதுக்காக்கவே இத்தனை கூத்துக்கள்
இவர்கள் எங்கே மக்களை பாதுகாக்க போகிறார்கள்
சுதந்திர தின ஊர்வலத்தில் அத்தனை ரானுவ தளவாடங்களும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், பீரங்கிகள், போர் ஆயுதங்கள் ஊர்வலத்தில் பார்வைக்கு வரும்.
இவை அனைத்தும் சர்வதேச நாடுகளிடம் பெருமை பீற்றி கொள்ள தான் இந்த ஊர்வலம்.
எங்களிடம் இவ்வளவு ஆயுதங்கள் உள்ளது ஆகவே அண்டை நாடுகள் ஜாக்கிரதை என்று மிரட்டுவதற்க்கும் தான் இந்த ஊர்வலம்.
ஆனால் இங்கே நிலைமையே வேறு உள்ளூர் தீவிரவாதிகளை ஒடுக்கவே துப்பில்லாத இந்த அரசு, எங்கே அடுத்த நாடுகளை மிரட்ட
சுதந்திர தின கொண்டாட்டத்திற்க்கு மட்டும் பல கோடி செலவு
எதற்கு இந்த வீண் விளம்பரம்........?
ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது
" குடிக்க கஞ்சி இல்லையாம் ஆனால் கொப்புளிப்பது பன்னீரில்"
அது போல தான் இவர்கள் செயல் பாடுகள்.
64 ஆண்டுகள் ஆகியும் அனைவருக்கும்
அடிப்படை வசிதிகள்,
சுகாதாரமான குடிநீர்,
வாழ்வாதாரம்,
பாதுகாப்பு,
உள்ளிட்ட எதையும் இத்தனை ஆண்டுகளாக ஆண்ட அரசுகள் இது வரை செய்யவில்லை
இன்றும் வறுமை கோட்டிற்க்கு கீழே எத்தனை பேர் உள்ளனர் என்ற தகவலை கூட இந்த அரசுகள் வெளியிடுவதில்லை,
இவரகள் செய்ததெல்லாம்
அன்னிய நாட்டு முதலாளிகளுக்கு
குனிந்து குனிந்து கும்பிடு போட்டு
இந்திய நாட்டை கூறு போட்டு விற்றது தான்.
தவிர 100 கோடி இந்திய மக்கள் இருந்தும் அதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்து எடுக்க முடியவில்லை
ஒரு அயல் நாட்டு பெண்னை தான் தலைவராக ஏற்று கொண்டுள்ளனர்
ஏன் என்றால் இங்கு ஒருவருக்கு கூட அந்த தகுதி இல்லையாம்
இந்தியனின் போறாத காலம் இன்னும் எத்தனை காலம் தான்
அன்னியன் நம் நாட்டை ஆளப்போகிறானோ தெரியவில்லை
ஆள்கின்ற கொள்ளையர்கள் கொள்ளை அடித்து கொண்டு போய்
அயல் நாட்டு வங்கிகளில் முடக்கியுள்ள பணம் போக மீதி தான்
இங்கே வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தபடுகிறது
ஊழலற்ற ஆட்சி நடத்த எந்த கட்சி தயாராக உள்ளது
எது எப்படியோ
சுதந்திர தினத்தில்
செங்கோட்டையில் தொடர்ந்து
7 முறையாக நேருவின் குடும்பத்தினர் அல்லாதவர் ஏற்றும் தேசிய கொடி இன்று பறக்கிறது
அதற்க்காவது ஒரு முறை உறக்க சொல்லுவோம் ஜெய் ஹிந்த்.
0 comments:
Post a Comment