Thursday, August 19, 2010

வாம்மா துரையம்மா

இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் வாரம் சிறப்பு தூதர் செல்வார் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த மத்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் கூறியுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை பற்றி முதல்வர் கருணாநிதியுடன் விவாதித்தாக கூறியுள்ளார். இலங்கை தமிழர் நிலை குறித்தும் இலங்கை தமிழர் நல்வாழ்வு குறித்தும் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறதாம். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, போர் முடிந்த பகுதியில் தமிழர்கள் மறுவாழ்வு பற்றியும், மறு குடியமர்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் பற்றியும் பேசியதாக கூறியுள்ளார். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த பிரச்னையில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறியுள்ளார். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கள் வீடு திரும்ப, இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும். தமிழர் பகுதியில் விவசாயம் மீண்டும் தொடங்கவும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீண்டும் இயங்கவும் மத்திய அரசு மிக விரிவான திட்டம் செயல்படுத்தப்படுமாம். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 2.5 லட்சம் வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளை தமிழக அரசு வழங்கியுள்ளதாகவும். 50000 வீடுகள் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் சொங்கின்ற படி அங்கு நடந்தால் தமிழ் மக்கள் சார்பாக அவரை வாம்மா துரையம்மா என பாட்டு பாடி அழைக்கிறோம்  இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனாக இருக்குமானால் நல்லது தான். ராஜபட்சே தனது குள்ளநரி வேலயை காட்டமல் இருந்தால் சரி,  தமிழர்கள் புனரமைப்புக்காக பிற நாடுகள் தரும் நிதியை சிங்களவருக்கு பயன்படுத்தாமல் இருக்க அனைத்து நாடுகளும் ஒரு தூதரை அனுப்பினால் நல்லது.

0 comments: