Thursday, October 21, 2010

குறை ஒன்றும் இல்லை

மத்திய அரசு கடை பிடித்து வரும் தாராளமய கொள்கைகளை சிறிதும் பிறழாமல் தமிழகத்தில் செயல் படுத்திவரும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க. அரசு தன்னை தொழிலாளர் வர்க்கம் உயருவதற்கு உறுதுனையாக இருக்கும் ஒரே கட்சி என்று எப்போதுமே பெருமை பேசிக்கொள்ளும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுத்து பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வாரியிறைத்து பெருமை பேசுகிறது தமிழக அரசு. அதே வேளையில் உள்ளூரில் இருக்கும் தொழில் நிறுவனங்களை நசுக்கி வருகிறது அவர்களுக்கு உருப்படியாக மின்சாரம் வழங்க கூட முடியாத அரசு, வெளிநாட்டிலிருந்து தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிருவனங்களுக்கு மட்டும் எப்படி தடையில்லா மின்சாரம் வழங்க முடிகிறது. ஆக மின்வெட்டு என்பதே ஒரு நாடகம் என்பது அம்பலமாகிறது. அதே வேளையில் இங்கே தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனகள் தொழிலாளர் சட்டங்களை முறை படி கடைபிடிக்க சொல்லி உத்தரவிடுவதில்லை மே தினத்திற்கு தி.மு.க. அரசு தான் விடுமுறை அளித்ததாக கூறி கொள்ளும் தலைவர் ஏன் இதில் மட்டும் முகமூடி அனிந்து கொள்கிறார். அரசின் சாதனைகளான இலவச திட்டங்களை கூறி பெருமை கொள்ளும் நேரத்தில் மின் தட்டுபாட்டை எந்த சாதனையில் சேர்ப்பார். தமிழகத்திற்கு மின் பிரச்சனை தவிர வேறு குறை ஒன்றும் இல்லை என்று முரசொலியில் வேண்டும் என்றால் எழுதலாம்.
Stumble This Fav This With Technorati Add To Del.icio.us Digg This Add To Reddit Add To Facebook Add To Yahoo

0 comments: