Tuesday, March 29, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஏழைகளின் காவலன்
தமிழர்களின் துயர் துடைக்க அவதரித்த திரு. கருணாநிதி,
மணல் கடத்தல்,
அரிசிக் கடத்தல்,
கந்து வட்டிக் கொடுமை ஆகியவற்றை ஒழிக்க
திமுக நடவடிக்கை எடுக்குமாம்.
அப்ப கடந்த 5 ஆண்டுகள் என்ன செய்தார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை இவர் ஆட்சியில் தான் எவ்வளவு கொடுமைகள் நடக்கவில்லை என்று கூறுகிறாரா...?
நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டு,
மீண்டும் வாய்ப்பளித்தால் ஒழிப்பேன் என்று சிறிதும் வெட்கமில்லாமல் கூறுகிறார்.

மணல் கடத்தலைத் தடுத்த அதிகாரிகள் பலர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்தது இந்த ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைகிறார் போல.

இவரது பொன்னான ஆட்சியில் தான்
கைத்தறித் துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா கந்துவட்டிக் கொடுமையிலும்,
மற்றவர்களது சொத்துக்களை அபகரிக்க முயன்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு
அதனாலேயே அவர் அமைச்சர் பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது  இவர் மீதான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பினையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் தலைமறைவானார். 
அவர் மீதான குற்ற வழக்குகள் முடிவு பெறாத நிலையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
குற்றவாளி களை அரவணைப் பதிலும்
ஆதரவு அளிப்பதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு
ஒரு காவல்துறை அதிகாரி குடும்பத்தையே வெட்டிச்சாய்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட உறவினருக்கு சிறைக்குச் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

திமுகவில் கிரிமினல்கள் எந்த அளவிற்கு செல்வாக்குடன் திகழ்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம்.
புதுச்சேரியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.கே. ரமேஷ்,
கருணாநிதியை சந்திக்கும்போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த அளவிற்கு நல்ல மனிதர் அவர் மீது நான்கு கொலை வழக்குகள்,
ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டபோது தலைமறைவாக இருந்த அவர் ஆளுங்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தைரியத்தில் வெளியே வந்தபோதுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நபர்களை அருகில் வைத்துக்கொண்டு
கந்து வட்டியையும் கிரிமினல்களையும் ஒழிப்பேன்
என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது
உண் மையிலேயே வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
கதாசிரியர் என்று பெயரெடுத்தவரின் கதையை,
மக்கள்   வாக்குச்சாவடியில் 
அவரின் கதை (ஆட்சி) முடிவை
எழுத வேண்டும்.  
என்ன தான் நடக்கும் நடக்க்கட்டுமே

0 comments: