Sunday, December 12, 2010

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு, வேலையில் ஏற்பட்ட இடமாற்றம், கணினியில் ஏற்பட்ட கோளாறு என தொடர்ந்த இன்னல்களால் சில நாட்கள் வலைபூ எழுத முடியாமல் போனது,  இடமாற்றம் ஏற்பட்டதில் வியக்கத்தக்க புதிய மனிதர்களை சந்திக்க நேர்ந்தது, நட்புக்காக வாழ்வை தொலைத்த மனிதன், சகோதரர்களுக்காக வாழ்வை தொலைத்த மனிதன், பணத்தை தேடி ஓடி குடும்பத்தை தொலைத்த மனிதன், என நீண்டு கொண்டே போகிறது, ஒவ்வொருவரையும் சந்திக்கும் பொழுது ஒவ்வொரு அனுபவம் ஏற்படுகிறது, மதுரையிலிருந்து கிளம்பி வரும் போது பேருந்தில், ராமன் என்ற நண்பர் அறிமுகமானார், புறப்பட்ட சிறிது நேரத்திலிருந்து பேச ஆரம்பித்து செல்லும் இடம் வரும் வரை பேசிக்கொண்டே வந்தோம் இறங்குவதற்கு முன்பு என்னுடைய கைபேசி எண்ணை கேட்டார், சிறிது தயக்கத்துடனையே கொடுத்து பிறகு மறந்து போனேன், 4 நாட்கள் கழித்து என்னை கைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார், நேரம் கிடைக்கும் போது சந்திக்கலாம் என கூறினார். பேருந்தில் ஏற்பட்ட பழக்கத்தை மறக்காமல் நினைவில் வைத்து, பிறகு தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அந்த பண்பு எனக்கில்லையே என்ற வருந்தம் ஏற்பட்டது.  

சில நேரங்களில் சிலரின் நட்பை பார்த்து ஆச்சர்ய படுவதுண்டு ரயில் பயணத்தில் ஏற்பட்ட நட்பு தொடர்ந்து, பிறகு குடும்ப அளவில் அறிமுகமாகி, இருவருக்குள் பெண் கொடுத்து, பெண் எடுத்து உறவு முறைகளாக மாறிபோன நட்பையும் பார்த்திருக்கிறேன். நட்புக்காக வாழ்வை தொலைத்த மனிதனையும் சந்திக்க நேர்ந்தது, நண்பருக்கு இளநிலை வேதியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது நட்பு வட்டாரம் அதிகம் எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் சுற்றியே இருக்குமாம். ஒரு நாள்  இவர் நண்பனின் தங்கையை சிலர் கடத்தி சென்று கற்பழித்து கொன்று வீசிவிட, அந்த செயலை செய்தவர்களை கண்டுபிடித்து நடுரோட்டில் வெட்டி வீசியிருக்கிறார்கள் இவரும் இவருடைய நண்பர்களும் அந்த கொலைக்காக சிறை தண்டனை அனுபவித்து நன்னடத்தை காரணமாக தண்டனை குறைக்க பட்டு விடுதலை அடைந்து  சொந்த ஊரில் வசிக்க முடியாமல் தற்போது வெளியூரில் வேலை செய்து வருகிறார் நட்புக்காக வாழ்ககையே தொலைத்த அவரின் கதையை கேட்டதும் எனக்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை அவர் செய்தது சரியா...? தவறா..? எனக்கு சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அது போல ஒரு நட்புக்காக  எதையும் செய்யும் நிலை எனக்கு ஏறபடவில்லை நண்பேன்டா...... என்று சொல்ல ஒரு நண்பனுமில்லை. படிக்கும் காலத்தில் நண்பர்கள் எனக்கு அதிகம் ஆனால் இன்றளவில் அப்படி யாருமில்லை சொல்லப்போனால் நானே எனக்கு நண்பன் இல்லையே..... சந்தித்த மனிதர்கள் சிலர் சிந்திக்கவும் வைத்துள்ளனர் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.... ஒவ்வொரு கவிதை......!

2 comments:

ஆனந்தி.. said...

அப்டியா...அதான் நான் உங்க ப்ளாக் வந்து பலமுறை தேடினேன்..இப்போ சுகம் தானே??

ஆயிரத்தில் ஒருவன் said...

நன்றி ஆனந்தி, வேலை பளு அதிகமானதால் தற்பொழுது தான் தங்களுக்கு தங்கள் கருத்துரை படிக்க நேர்ந்தது உடல் நிலை இப்போது பூரண நலம்.