Sunday, July 28, 2013

சோதனை மேல் சோதனை


எனக்கு அஞ்சு மணிக்கு மேல 2 கண்ணும் தெரியாது....!

oh... my god ...... i am very sorry. நீ ... இங்கேயே உட்காரு.

சாரி ... சார் என்னால உட்கார முடியாது.

ஏன்...?

எனக்கு மூலம். உள் மூலம், வெளி மூலம்.

உன் பேரு என்னப்பா .....?

ஆதிமூலம்.

கரெக்டா தான் வச்சிருக்குற. கையை குடு பல்ஸாவது பாக்குறேன்.

சாரி சார். என்னால கையெல்லாம் குடுக்க முடியாது நீங்களே புடிச்சி பாத்துக்கங்க.

அது ஏன்.....?

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பக்கவாதம் வந்ததுல என் ரெண்டு கையும் விழுந்து போச்சு.

பக்க வாதம் இல்லப்பா ..... பக்கா வாதம். பாவமா இருக்குறியே ஒரு டீ யாவது சாப்பிடு.

ஐயையோ .... நான் டீ, காபி எல்லாம் சாப்பிடுறதில்ல.

ஏன்.... பழக்கமில்லியா.....?

இல்ல சார் எனக்கு சக்கரை வியாதி.

சுகரா.......!

இது எத்தனை நாளா.....?

ரத்தக்கொதிப்பு வந்தப்போ, அதுவும் சேர்ந்து வந்திடுச்சு.

ரத்தக்கொதிப்பு வேற இருக்கா .....?

டி.பி. வந்தப்போ ..... அதுவும் Joint ஆயிடுச்சு.

இந்த இடம் சரியில்லை, வா நடந்துக்கிட்டே பேசுவோம்.

சாரி, சார் என்னால ரொம்ப தூரம் நடக்க முடியாது.

ஏன்.......?

கால்ல ஆணி சார்.

அடப்பாவி.

ஒரு உடம்புக்குள்ள ஒரு கோடி வியாதியா ...... ?

சார் நீங்க எதோ பேசுறீங்கன்னு தெரியுது எது பேசுனாலும் இந்த பக்கம் வந்து பேசுங்க ....

ஏண்டா....?

மஞ்சகாமாலை வந்ததிலிருந்து இந்த பக்க காது கேக்குறதே இல்ல.

இந்த லட்சணத்துல போனா மருத்துவர் குழு நிலைமை மற்றும் நீதிமன்ற விசாரணை என்ன ஆகும்னு உங்க கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

https://www.facebook.com/duklakdurbar

 துக்ளக் தர்பார்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இது வரை எழுதி கிழிச்சது

▼ 2013 (1)
▼ July (1)
சோதனை மேல் சோதனை...!

ஆயிரத்தில் ஒருவன் said...

\\\ திண்டுக்கல் தனபாலன் ///
அண்ணா நான் எழுதி கிழிச்சது எல்லாம் 2010ல தான் இப்போ இதில கிழிக்கிறது கம்மி தான் இருந்தாலும் முகநூலில் Face Book ல கிழிச்சிகிட்டு தான் இருந்தேன். என்ன இருந்தாலும் Blogல் எழுதி கிழிக்கிற சுகமே தனி தான். இனிமே இங்கிட்டும் கொஞ்சம் கிழிச்சுக்குறேன். கிழிக்கிறது தொடரும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் இதிலும் மீண்டும் தொடர வேண்டும் என்று ஆவல் தான்... வாழ்த்துக்கள்...