Saturday, June 21, 2014

இருக்கிற பிரச்சனையில இவிங்க வேற



100 ஆண்டுக்கு மேல் வரலாறுகள் கொண்ட திரைப்பட துறை பல கலைஞர்களையும், பல படைப்பாளிகளையும் எண்ணற்ற மனிதர்களை உலகுக்கு காட்டியுள்ளது உலகின் பல நாட்டு அரசியலை கூட தலை கீழாக்கியது என்று சொன்னால் மிகையாகாது.

திரைபடங்கள் இல்லாத நாடே இல்லை என்ற நிலைக்கு கிட்டதட்ட இந்த உலகமே வந்துவிட்டது.  பல துறைகளை கொண்டு நவீன தொழில் நுட்பங்களால் புதிய கண்டுபுடிப்புகளால் தன்னை புதுபித்து கொண்டே வந்துள்ளது. மனிதன் காணாத புது புது உலகத்திற்கும், மனிதனின் அதீத கற்பனைக்கு வடிவம் தந்து ஒருவரின் சிந்தனையை உலகமே பார்க்க  செய்வதென்பது சினிமாவால் மட்டுமே சாத்தியம்.

எத்தனை கோடி தொழிலாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள்,
இசை கலைஞர்களின் உழைப்பு மற்றும் அற்பணிப்பு தான்
இந்த திரைப்படத்துறை.
கற்பனை குதிரையை தட்டி விட்டு 
அதை படமாக்கி உலகுக்கு காட்டும் வரை 
எத்தனை பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகிறார்கள் அவர்கள் ஒரு புறம் இருக்க, 
 அதை காண முந்தி அடித்து சென்று ஆர்வத்துடன் காண்பவர்கள் ஒரு புறம். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
ஊரறிந்த தகவலுக்கு விளக்கம் எதற்கு............?

குப்பைகளை கோபுறமாக்குவதும், 
கோபுரங்களை குப்பைகளாக்குவதும் 
இங்கே சில நொடி பொழுதுகளில் நிகழும்.

பயன் அடைந்தவர் பலர், 
பணம் இழந்தவர் பலர். 

எண்ணற்ற பாரம்பரிய கலைகளை நசுக்கியதும், 
பல அரிய கலைகளை மீட்டெடுத்ததும் இதே துறை தான். 
ஆண்டுக்கு பல லட்சம் கோடிகள் புரளும் துறைகளில் இதுவும் ஒன்று.

இந்திய திரைப்படதுறையில் பல மொழிகள் முக்கிய பங்களிக்க
குறிப்பாக அதில் நமது தமிழ் திரைப்படங்கள், மற்றும் அதன் நடிகர்கள் படைப்பாளிகளின் பங்கு அளப்பறியது.
திரைப்படத்தை பார்த்து ஏமாந்து நாட்டின் முதல்வர் ஆக்கிய வரலாறுகள் இங்கே மிகவும் முக்கியமானது.

அரசியலை நோக்கிய படையெடுப்பு
திரைதுறையில் இருந்தே நெடுங்காலமாக தொடங்கபடுகிறது
அது இன்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இனிமேலும் கூட இருக்கும்.

அரசியலில் சினிமா தனமும், 
சினிமாவில் அரசியலும் கலந்தே தான் நமக்கு காண கிடைக்கிறது.

நாட்டில் விலைவாசி உயர்வு ஒரு புறம்,
பண வீக்கம் ஒரு புறம்
இன்னும் சொல்ல போனால்
ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் சாகும் பல லட்சம் பேர்
இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்க

அது எல்லாம் கண்ணுக்கு தெரியாமல்,
நகை கடை விளம்பரத்தில் நடித்து கொண்டும்,
கோடிகளில் சம்பளம் பெற்று கொண்டும்,
வரி ஏய்ப்புகள் செய்து கொண்டும்,
பல தயாரிப்பாளர்களை நடு தெருவிற்கு கொண்டு வந்தும்
இன்னும் சொல்ல போனால்
தனது திரைப்படம் லாபம் ஈட்டுகிறதோ இல்லையோ
அதை கூட தெரிந்து கொள்ளாமல்
மேலும் மேலும் தனது சம்பளத்தி உயர்த்தி கொண்டே சென்று விட்டு

திரைப்பட துறையை அழிவில் இருந்து மீட்க
வரி விலக்கு கேட்கும் அறிவாளி நடிகர்களே ..........

இன்னும் உங்கள் சம்பளத்தை ஏற்றி கொண்டே போங்கள்.
இழைத்தவன் ரசிகன் இருக்க 
நீங்கள் மோடிக்கும் கடிதம் எழுவீர்கள், 
ஓபாமவுக்கும் கடிதம் எழுதுவீர்கள்.

நீரின்றி வாடும் ஏழை விவசாயிக்கு தண்ணீர் கேட்டு
கடிதம் எழுதியது உண்டா ........... ?
எங்கேயாவது பேசியதாவது உண்டா ........ ?
அப்படி பேசினால் அங்கே உங்கள் படம் ஓடாது என்ற பயம்
இது தான் உங்கள் வீரம் என்பது இங்கே இருக்கும் இழைத்தவன்
ரசிகனுக்கு தெரியாது அவனுக்கு அது தெரிய ஆரம்பித்தால்
குடிக்க தண்ணீர் தேடி நீங்கள் தான் அலைய வேண்டி வரும்.

மூழ்கும் ஓடத்தில் மேலும் மேலும் பாரத்தை ஏற்றி கொண்டே காப்பாற்றுங்கள் ................... காப்பாற்றுங்கள் 
என்று அலறுவது நகைப்பிற்குரியதே தவிர 
வேறு என்ன சொல்ல ................. ????

சம்பளங்களையும் ஆடம்பரங்களையும் கொஞ்சம் குறைத்தால் 
வாழுமே உன் உலகம். 

உழைத்து களைத்து வரி கட்டும் ஏழைகளுக்கு சலுகை தரலாம்
உன் போன்ற கழிசடைகள் கோடிகளில் புரண்டு கொண்டு
அழிவை நோக்கி தள்ளிய துறைக்கு எதற்கு வரி விலக்கு
முடிந்தால் உங்கள் சம்பளத்தை வெள்ளைகளாக வாங்குங்கள்,
முறையாக வருமானவரி கட்டுங்கள்.

சம்பளத்தை லட்சங்களில் பெறுங்களேன் ............!!!
கொடி கட்டி பறந்து தழைத்தோங்குமே உன் திரைப்பட உலகம்.

இல்லாதவருக்கு அள்ளி கொடுக்க வேண்டாம் ............
கிள்ளி கொடு

இன்னும் தொடரும். - ஆயிரத்தில் ஒருவன்




0 comments: