Wednesday, July 13, 2011

கண்ணை கட்டி கொள்ளாதே

தில்சன் என்ற சிறுவனை சுட்டுக்கொன்ற ரானுவ மிருகம் பிடிப்பட்ட செய்தி கூட அடங்கிபோயிற்று. இருப்பினும் அந்த மிருகத்தின் சொம்பு தூக்கிகளின் துதிப்படல்கள் ஓய்ந்தபடில்லை. ஒன்றுமறியா சிறுவனை சுட்டுக்கொன்றதே பாவம், அதனை பாராட்டும் மிருகங்களை என்னவென்று சொல்வது, தொப்பி தொப்பி என்ற சொம்பு தூக்கி பற்றிய பதிவே இது.

இந்தியாவில் இருக்கும் எல்லா இந்தியனுக்கும் தேச பற்று கண்டிப்பாக இருக்கும், அது என்னவோ இவருக்கு மட்டுமே உள்ளது போலவும் ரானுவத்தினரை ஒரேடியாக தூக்கி பிடித்து தனது அரைவேக்காட்டு +கேவலமான தேச பற்றினை வெளிபடுத்தியிருக்கிறார். இது போன்று  பரபரப்பாக எழுதுவதால் தன்னை ஒரு புரட்சி எழுத்தாளன் என்று பிறர் பாராட்டுவார்கள் என்ற எண்ணம் போல, இதே இவன் வீட்டு பிள்ளை பந்து விளையாடும் போது அது பக்கத்து வீட்டில் விழுந்து அதை எடுக்க போகும் பொழுது அந்த வீட்டுக்காரன் இவர் பிள்ளையை நாயை விட்டு கடிக்க விட்டால் சும்மா விடுவாரா என்ன...? அல்லது இவர் அந்த பக்கத்து வீட்டுகாரரை பாராட்டி பரிசு கொடுப்பாரா என்ன....? ஒரு வேளை, இவர் பரிசு கொடுத்தால் நானும் தில்சன் செய்தது தவறு என்றும் அவனை ரானுவ அதிகாரி சுட்டது சரி என்று ஒத்துகொள்கிறேன். குருட்டு பூனைக்கு உலகமே இருட்டு என்பது போன்றது அவரின் கரு(ம) (த்து)கள். இவர் இந்த கேவலமான பதிவு எழுதிவிட்டு அதற்கு விளக்கம் வேறு தனது பின்னுட்டங்களில் தருகிறார் அது தான் மிகபெரிய நகைப்பு, அந்த பதிவுக்கு ஓட்டளித்தவர்களுக்கும் இதே கேள்வியை முன் வைக்கிறேன். பதில் கூற தயாரா......? மனச்சாட்சி இல்லாதவர்களும், மனித நேயமில்லாதவர்களும் தான் கண்டிப்பாக பதில் அளிப்பார்கள் என்று நினைக்கிறேன், அதெல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை  பதில் அளிப்பவர்கள், அவர்களோ அல்லது அவர்களை சார்ந்தவர்க்கோ ஆபத்து காலத்தில் ரத்தம் வேண்டியோ அல்லது, வேறு ஏதும் உதவிகள் அடுத்தவரிடம் கேட்கமாட்டேன் என்று உறுதி அளிப்பார்களேயானால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகிறேன்.

நான் அரசியல் வாதிகளையும், மக்களை சுரண்டுபவர்களை பற்றி மட்டுமே என் பதிவுகளில்  சுட்டுகாட்டியிருக்கிறேன். ஒரு சில பதிவர்கள் போல் விளம்பரத்திற்காக இதை எழுதவில்லை சமூகத்தில் நான் படிக்கும்,கேட்கும் செய்திகளில் என் கருத்தை பதியவே பதிவு எழுதி வருகின்றேன். திலசன் கொலையை நியாயபடுத்தும் அத்தனை அரை வேக்காடுகளுக்கும் எனது கடுமையான கண்டணத்தை இங்கு பதிவு செய்கிறேன். பதிவுலகம் என்பது மற்றுமொறு ஊடகம் என்பதே உண்மை. அதில் தில்சன் கொலையை  நியாயபடுத்துவது போன்ற எந்த விஷம கருத்துகளை எழுதாதீர்.

தொப்பி தொப்பி என்ற (அரை வேக்காடு) சொம்பு தூக்கி இதை படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி, அவரின் சொம்பு தூக்கிகள்(அரை வேக்காடு) இதை படித்தாலும் சரி படிக்கவிட்டாலும் சரி,அல்லது படித்தவர்கள் அவரிடம் சொன்னாலும் சரி. கடைசியாக ஓரே ஓரு கேள்வி நேதாஜி பற்றி என்ன தெரியும் என்று அவரின் புகைபடத்தை வைத்திருக்கிறீர்கள். அவரை கேவலபடுத்தவே அவரின் புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் அதற்கும் ஒரு கண்டனத்தை பதிவு செய்கிறேன்.  

0 comments: