Tuesday, June 21, 2011

ஒரு முறை, இருமுறை, பலமுறை

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவிடுமுறை கூடுதலாக 15 நாட்கள் விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒருவார காலம் நிறைவடைவதற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என 2 பேரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் (15) என்ற மாணவர், பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மாணவர்களிடையே ஒரு வித பய உணர்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

கல்வி என்பது அறிவு, பண்பு, பகுத்தறிதல் போன்றவற்றை வளர்த்து கொள்வதே தவிர மதிப்பெண் வாங்குவது மட்டும் அல்ல, ஆனால் இன்றைய ஆசிரியர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிக மதிப்பெண் பெறுவதிலே குறியாக உள்ளனர். அதனால் தான் இது

 போன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்கின்றன ஒரு வகுப்பில் படிக்கும் அத்தனை மா
வர்களும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பில்லை, ஒரு சில சுமாராக படிக்க கூடிய மாணவர்களும் இருக்கலாம் அவர்களையும் ஊக்குவித்து அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் அதை விடுத்து அவர்களை பிற மாணவர்கள் முன்னிலையில் கேவலமாக திட்டுதல், அடித்தல், தண்டித்தல் போன்ற செயல்கள் அவர்களை தற்கொலை முடிவை எடுக்க தூண்டுகிறது. ஒரு முறை, இருமுறை, பலமுறை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்து அவர்களும் வெற்றி பெற செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்பதை அவர்கள் என்று உணர போகிறார்களோ.......? 
Stumble This Fav This With Technorati Add To Del.icio.us Digg This Add To Reddit Add To Facebook Add To Yahoo

0 comments: