Monday, November 1, 2010

எங்கே செல்லும் இந்த பாதை

குழந்தைகளை படிக்க அரசு பள்ளிகளுக்கு அனுப்பினால் அங்கே கல்வி மட்டும் கற்று தருவதில்லை, கழிவு நீர் அகற்றவும்  சொல்லுகின்றனர் இந்த கொடுமை எல்லாம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வள்ளிப்பஜரம் கிராமத்தில் உள்ள அரசினர் நடு நிலைபள்ளியில் தான் நடக்கிறது. 

பள்ளியில் உள்ள கழிவறை நிரம்பிவிட்டால் பள்ளியில் படிக்கும் மானவிகளை வைத்தே சுத்தம் செய்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை எதிர்த்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இங்கே பள்ளி குழந்தைகளுக்கே இந்த நிலைமையை என்னவென்று சொல்வது, புகைபடத்தோடு செய்திகள் வெளிவந்தும் பள்ளி கல்வி துறை எந்த விசரணையும் நடத்தாமல் தூங்கி வழிகிறது.


சரி, அரசு பள்ளிகளில் தான் இத்தனை கொடுமைகள் என்றால் தனியார் பள்ளிகளும் தங்கள் பங்கிற்க்கு கொடுமைகளை அறங்கேற்றி வருகிறது. மாணவர்களை அடிப்பது, திட்டுவது  உடல் ரீதியாக துன்புறுத்துவது குற்றம் என்று எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்த தனியார் பள்ளிகள் அதை கண்டு கொள்வதில்லை கோவை நகரில் அர்.எஸ். புரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மிக கொடுரமான முறையில் வழங்கபட்டு வருகிறது 


சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகளுக்கு இப்பள்ளி ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனை தான் "எறும்புக்கடி!' சொல்படி கேட்காத சிறு குழந்தைகளை, இங்குள்ள ஒரு சிறு மரத்தில், கயிற்றால் கட்டிப் போட்டு விடுகின்றனர். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள சிவப்பு எறும்புகளின் கடி தாங்காமல் குழந்தைகள், கால்களை மாற்றி, மாற்றி வதைபட்டு கதறுவதை பார்க்கும் பிற குழந்தைகள், மனதளவில் மிரண்டு விடுகின்றனர். மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது. 


பெற்றோரிடம் சொன்னால், "டிசி' கொடுத்து அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர். மிரட்டலால் மிரண்டு போகும் குழந்தைகள், இதுகுறித்து பெற்றோரிடம் மூச்சு விடுவதில்லை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களோ இது போன்ற புகார்கள் குறித்து கண்டு கொள்வதில்லை எங்கே செல்லும் இந்த பாதை என்று பார்த்து கொண்டிருக்காமல் அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு
Stumble This Fav This With Technorati Add To Del.icio.us Digg This Add To Reddit Add To Facebook Add To Yahoo

1 comments:

Woltta said...

தம்பி,ஆறறிவு உள்ளவனுக்கு அரசாங்கத்தில் வேலை இல்லை என்று உனக்கு தெரியாதா?