Thursday, July 15, 2010

திராணி இல்லாத திராவிட கட்சிகள்

       கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய அம்மையார் தி.மு.க.வை ஜனநாயக முறைப்படி வீழ்த்த தயாராகும் படி கேட்டுக்கொண்டுள்ளார்

கூட்டணி சமாசாரங்களை தான் பார்த்து கொள்வதாகவும், கட்சியினர் எதிர்பார்க்கும் அந்த கூட்டணியே விரைவில் அமையும் என்று கூறியுள்ளார். ஆக, வெற்றி என்பது கூட்டணியை பொறுத்தே அமையும் என்று இவர்கள் எதிர்பார்ப்பு

இரண்டு திராவிட கட்சிகளும் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளாகியும் இவர்கள் மாறி மாறி ஆட்சி செய்தும் இவர்கள் சவாரி செய்ய நினைப்பது கூட்டணி குதிரையில்.

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த இவர்கள் மக்களுக்கு பயன்பெறும் திட்டங்கள் என்று ஒன்றை கூட இவர்களால் மார்த்தட்டி கூறமுடியாது  செய்ததெல்லம் இவர்கள் குடும்பங்களுக்கும்  கட்சிகாரர்களுக்கும் தான். சென்ற வாரம் ஒரு நகைச்சுவை ஒன்றை மூதறிஞர் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் வெளியிட்டுள்ளார் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் அன்னிய முதலீடுகளை அதிகம் கவர்வதில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழகம் இருப்பதாக  கூறியுள்ளர்.

மேலும் சென்ற ஆட்சியில் இது போன்று செய்தி வெளியிடுவதற்காக ஜெ. ரூ.2.88 கோடி செலவிட்டுள்ளதாக கூறியுள்ளார் சரி
இவர் இந்த விளம்பரத்திற்காக எவ்வளவு செலவழித்தார் என்று நாளை ஜெ. வந்தால் வெளியிடுவார்.
இது போன்ற கூத்துகளை தினம் தினம்  பார்த்து சலித்து விட்டது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக்கு அச்சாரங்கள் போடும் வேலையில் இப்பொழுதே கழகங்கள் இறங்கி விட்டது தே.மு.தி.க தலைவர் முன்பு கூறியதை போல அனைத்து கட்சிகளும் தணித்து போட்டியிட வேண்டும்.

அதற்கு முன் வருமா கழகங்கள் எனக்கு தெரிந்து திராவிட கட்சிகள் தணித்து நின்று போட்டியிட்டதாக செய்தியில்லை இவர்கள் மக்களுக்கு ஏதாவது செய்தால் தானே இவர்கள் அதை பற்றி  யோசிக்க.

மீனவர் பிரச்சனை ஆகட்டும், இலங்கை பிரச்சனை ஆகட்டும் அனைத்திற்கும் கடிதம் எழுதியே தீர்வு கான்பார். இவரை விட ஜெ. பரவாயில்லை கடிதமும் எழுதுவதில்லை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதும் இல்லை ஒரே ஒரு முறை மட்டும் சென்னை மெரினா கடற்கரையில் காவேரி பிரச்சனைகாக உண்ணாவிரதம் இருந்தார்.

அப்புறம் கவர்னர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். 100 தடவைக்கு மேல் அமைச்சரவையை மாற்றி அமைத்திருப்பார். இவர் செய்த ஒரே ஒரு சாதனை லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தது தான் இத்தனை சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டால் நடக்குமா,

இல்லை இவர்கள் தணித்து போட்டியிட பரிட்சார்த்த முறையில்  யோசிக்க கூட மாட்டார்கள்
ஏன் என்றால் இவர்கள்

திராணி இல்லாத திராவிட கட்சிகள்.   

0 comments: