Sunday, July 4, 2010

திரைப்பட துறையினர் மீதான உங்கள் பார்வையை மாற்றி கொள்ளுங்கள்

இந்த பதிவை எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன்
ஆனால், இருப்பு கொள்ளவில்லை. நான் யாரையும் விமர்சனம் செய்வது கிடையாது (அரசியல்வாதிகள் மட்டும் விதி வலக்கு).
இந்த உலகத்தில் யாரும் யாரையும் விமர்சனம் செய்வது தவறு என்பதே என் கருத்து.
தொடர்ந்து ஒரு பதிவர் (இரவை வெண்மையாக மாற்றி அதை தூங்காமல் ரசிக்கும் கவிஞர்)
தன்னுடைய பதிவில் எல்லை மீறி மற்றவர்களை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து எழுதுகிறார்
அதை கண்டித்தே ஆக வேண்டும். பதிவுலகத்தில் நான் பார்த்த முதல் பக்கமே அவருடயது தான்
இன்னும் சொல்ல போனால் இப்படியெல்லம் எழுதலாம் என்று தெரிந்ததே அவரின் தளத்தை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்
பதிவரின் நண்பர் எனக்கு நண்பர் அவர் தான் எனக்கு முதன் முதலில் அந்த தளத்தை காண்பித்தார் எனக்கோ ஆச்சர்யம்,
அப்பொழுது தான் இணைய தள வடிவமைப்பாளராக பணி ஆரம்பித்த நேரம் அவரின் எழுத்தில் கம்யுனிச கருத்துக்கள் நிறைந்து காணப்பட்டது.
நானும் கம்யுனிச கருத்து உடையவன் என்பதால் தொடர்ந்து படித்தேன். பதிவர் அடிக்கடி திரைப்படங்களை விமர்சிப்பார் நான் அவற்றை தவிர்த்துவிடுவேன் திரைப்படங்கள் நான் அதிகம் பார்ப்பதில்லை அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் செய்வது கிடையாது
திரைபடத்தை நமது வாழ்ககையோடு தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை ஏன் என்றால் அது வெறும் மாய உலகம் அதில் பணியாற்றுபவர்கள் உத்தமர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை சொல்லப்போனால் இந்த உலகில் யாருமே உத்தமர்கள் கிடையாது என்பதே என் கருத்து.
ஆனால், அந்த பதிவர்  தொடர்ந்து திரைப்பட துறையில் பணிபுரிபவர்களை வசை பாடுவதிலே குறியாக இருக்கிறார் அவர் மட்டும் அல்ல, பதிவுலகில் 90% அப்படித்தான் எழுதுகின்றனர். 
என் கேள்வி என்னவென்றால் நீங்கள் ஏன் அவர்களை பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கு என்று சொந்த கருத்து கிடையாதா,
அவர் பெப்சி குடித்தால் உங்களுக்கென்ன.....?
சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்தால் உங்களுக்கென்ன ....?
நடிகர்கள் 100 கொடுத்தால் நான் வாழ்க என்று சொல்வர்
200 கொடுத்தால் என் குலம் வாழ்க என்று சொல்வார்கள்
அது அவர்களின் தொழில் அதை ஏன் கேவலமாக எழுதுகிறீகள்
பதிவர் வேலை செய்வதோ மென்பொருள் துறையில் அதை அவரால் விமர்சனம் செய்ய முடியுமா.....
அப்படி விமர்சனம் செய்து கொண்டு அந்த பணியில் இருந்து விட முடியுமா..... அவர் அந்த வேலையினால்  அனுபவித்து வரும் சுகங்களை விட்டு வர மனம் இருக்குமா....
பேருக்கு வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் உள்மனம் என்ன சொல்லும். திரைப்பட துறையினர் அவர்கள் ஈட்டும் வருவாய் தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலே முதலீடாக, சொத்தாக மாறுகிறது.
ஆனால் நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா உங்கள் நிறுவன வருமானம் எந்த நாட்டுக்கு செல்கிறது என்றாவது தெரியுமா.......
நீங்கள் எல்லாம் அறிவாளிகள் என்று பிதற்றிக்கொள்ளவும் மெத்த படித்தவர் என்று காட்டிக்கொள்ளவும், நானும் ஒரு படைப்பாளி என்று ஒரு விளம்பரம் தேடவே இது போன்று எழுதுகிறீர்கள்,
எங்கே திரை உலகை தொடாமல் ஒரு பத்து பதிவுகள் எழுதுங்கள் பார்ப்போம். உங்களால் எழுத முடியாது என்றே சொல்கிறேன்.
உங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் படிக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது, பின்பு பதிவுலகில் உள்ளே சென்று பார்த்த பின்பு தான் உண்மை புரிந்தது உங்கள் பதிவு எதுவுமே உங்கள் சொந்த கருத்து இல்லை என்று, அப்படியும் 100 பதிவுக்கு மேல் எழுதிவிட்டீர்கள் பாராட்டத்தான் வேண்டும். உங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது அந்த வகையில் உங்களுக்கு வெற்றிதான்.
உங்களை தவறாக சொல்லவில்லை திரைப்பட துறையினர் மீதான உங்கள் பார்வையை மாற்றி கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்.
மணிரத்னம் எந்த சாதியில் இருந்தால் உங்களுக்கென்ன....... 
விஷமத்தை கக்கும் வினவு தளத்தில் இருக்கும் எழுத்துக்களை அப்படியே எழுதும் உங்களிடம்
வினவு தளத்தில் பின்னூட்டம் போடுபவர்களின் மனநிலையே கண்டிப்பாக இருக்கும்.
கம்யுனிசம் பேசுவதற்க்கு உங்களுக்கு அருகதையே இல்லை என்பதே என் தாழ்வான கருத்து. நீங்கள் சாதி உணர்வை தாண்டி இன்னும் வரவில்லை அப்படி இல்லை என்றால் நீங்கள் அனைவரும் சமம் என்றே நினைத்திருப்பீர்கள் உங்கள் எழுத்துக்கள் அவ்வாறாக இல்லையே,
நீங்கள் எல்லாம் ஏன் லெனின் பற்றி பேசுகிறீர்கள்.....?
நகைசுவையாக இருக்கிறது.  பதிவர் நரசிம்மை நீங்கள் கண்டித்து எழுதுகிறீர்கள் அவருக்கும் உங்களுக்கும் பெரிய  வித்தியாசமில்லை. 
நீங்கள் கூறுவது போல் திரைப்படம் பார்த்துதான் சமூகம் சீரழிகிறது என்பது நகைசுவையான ஒன்று திரைப்படங்கள் வருவதற்க்கு முன் சமூகம் யாரை பார்த்து கெட்டது திரைப்படம் பார்த்துதான் சுதந்திர போரட்டம் நடைபெற்றதா.......
அப்படி என்றால் திரை அரங்குகளே இல்லாத ஆப்கானிஸ்தானை என்ன சொல்வீர்கள்....... அங்கே சமூகம் நல்ல படியாக உள்ளதா உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ப்ளாச்சிமடா, தண்டகாரண்யா, பார்பனீயம் அதுவும் வினவு தளத்திலிருந்து இறக்குமதி.........
மணிரத்தினத்தை வசை வசை பாடும் நீங்கள் யாரின் படைப்புகளைத்தான் பாரட்டுவீர்கள்......
ஒரு வேளை வினவு தளத்தில் யாரையாவது பாரட்டினால் நீங்களும் வழிமொழிவீர்கள் இல்லையா............. 
சொந்த கருத்துக்களை எழுத பழகுங்கள் அதுவே எழுத்துலகில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் கிடைக்கும்
உங்களுக்கும் உங்கள் எழுத்தின் மீது ஒரு காதல் உணர்வை வளர்க்கும் ............ எல்லோரும் யாரையாவது பின்பற்றித்தான் வந்திருப்பார்கள் ஒரு கட்டத்தில் தனக்கென்ற ஒரு வழி ஏற்படுத்திக்கொள்வதே  நல்லது............

0 comments: