Monday, September 6, 2010

உசிரே போகுது உசிரே போகுது

கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடருமேயானால்,
அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா  எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிகழ்ச்சி தொடர்பாக, சில பணிகளில் ஈடுபட்ட போது, காவல் துறைக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது அடையாள அட்டைகளை காண்பித்தும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி காயப்படுத்தியிருக்கிறார் தலைமைக் காவலர்.

சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய தலைமைக் காவலர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் தி.மு.க.,வினர் நடத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல் துறையின் அனுமதி பெற்று கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தி.மு.க. விற்க்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக அ.தி.மு.க., சார்பில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறை கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது மிகவும் சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் இனியும் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை, தி.மு.க., அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் இந்த அம்மாவுக்கு இப்பதான் மாணவர்கள் மேல கரிசனம் வருமாம்.

2000ம் ஆண்டில்  இவர்கள் கட்சிகாரர்கள் 4 கல்லூரி மாணவிகளை உயிரோடு வைத்து ஈவுஇறக்கமின்றி எரித்தார்களே அப்போது எங்கே போனார் இந்த அம்மையார்.அப்போதெல்லாம் ஒரு கண்டணம் கூட தெரிவிக்க வக்கில்லை இப்போது தேர்தல் வரும் வேளையில் மக்களை திசை திருப்ப அறிக்கை மேல் அறிக்கை விடுகிறார். இவர்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.  

உசிரே போகுது உசிரே போகுது  
என்று தீ வைத்து கொளுத்தபட்ட போது அந்த மாணவிகள் எப்படி துடித்திருப்பார்கள் என்பதை ஓட்டு போடும் போது மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

2 comments:

இனிய தமிழ் said...

கவுண்டமணி சொன்னது போல் "அரசியல்ல இதெல்லாம் சகஜம்" பொது மக்கள் எதையும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடாது

சரவணன்.D said...

பகிர்வுக்கு நன்றி....