Monday, September 13, 2010

நான் போகிறேன் மேலே மேலே

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு (எல்.பி.ஜி.,) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, திட்டத்தை துவக்க திட்டமிட்டிருக்கிறது. 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐ.மு.கூட்டணி, தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறதசாம். தற்போது இத்திட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று திட்டத்தை துவக்க யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளதாம். இதன்படி ஆண்டுதோறும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 35 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும். சமையல் காஸ் இணைப்பு பெற இப்போது நுகர்வோர், ஒரு சிலிண்டருக்கு 1,250 ரூபாய் டிபாசிட் தொகையும், ரெகுலேட்டருக்கு ரூ.150ம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு செலவாகும் 1,400 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.490 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். இன்னும் ஐந்தாண்டுகளில் மொத்தம் ஐந்தரை கோடி சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப் பட உள்ளதாம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, மண்ணெண்ணெய் மற்றும் விறகுகள் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை தூய்மைபடுத்துவதற்கும் வழி ஏற்படுமாம். இதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி காஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாம். இதில், இலவசமாக வழங்கப்படும் 35 லட்சம் காஸ் இணைப்புகளும் அடங்கும். இத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசு, இலவச சமையல் காஸ் இணைப்புடன், காஸ் அடுப்பையும் இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

தங்கம், உணவு பொருட்கள், காய்கறி என ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது  குடும்ப விழாக்களை நடத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் திண்டாடி வருகின்றனர். எங்கு திரும்பினாலும் திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு என எல்லா ஊர்களிலும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இவ்வாறான குடும்ப விழாக்களை நடத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் திண்டாடி வருகின்றனர். காரணம் எல்லா பொருட்களின் விலை ஏற்றம் தான். உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதிலும் உணவு பரிமாற அத்யாவசியமான வாழை இலை ஒன்றின் விலை 5 முதல் 6 ரூபாய் வரை உள்ளது. இந்த விலைக்கு வாழை இலை விற்பனையாவது இதுதான் முதன்முறை.மேலும் திருமணத்தில் முக்கிய இடம் பிடிக்கும் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சென்ற ஆண்டு இதே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1487 ரூபாய். நேற்றைய விலை  1788 ரூபாய். இது கிராமிற்கு 301 ரூபாய் அதிகம்.இதுதவிர விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூவின் விலை 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் மண்டபம், சமையல் ஆட்கள், போட்டோ, வீடியோ கிராபர்கள், வேன், கார், துப்புரவு தொழிலாளர் என எல்லா தரப்பிலும் கடுமையாக செலவு தொகை உயர்ந்துவிட்டது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் விழாக்களை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலானோர் கடன் வாங்கியே விழாக்களை நடத்தும் சூழல் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளின் அலட்சியப்போக்கு தான்.அரசு தரும் இலவச பொருட்களை போட்டி போட்டு வாங்கும் மக்கள் விலைவாசியின் கடுமையான உயர்வுக்கு இந்த இலவச பொருட்கள் தான் அடிப்படை காரணம் என்பதை உணராவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சூழலை சந்திக்க நேரிடும் நான் போகிறேன் மேலே மேலே என்று விலை வாசி எகிறிக்கொண்டே போகிறது அதை கட்டுப்படுத்தவேண்டிய  அரசுகள் தூங்கி வழிகின்றது என்பதே உண்மை

1 comments:

swarna said...

பணக்காரர்கள் மேலே போக போக அரசாங்கங்களுக்கு என்ன கவலை...