Wednesday, September 8, 2010

நாட்கள் நகர்ந்து வருடங்கள்

வேலை வாய்ப்பில்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்களின் வீட்டுக் கதவை தட்டி, தி.மு.க., அரசு ஆசிரியர் வேலை வழங்கி வருகிறது,'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் தமிழ் ஆசிரியர்கள் 441 பேர், ஆங்கில ஆசிரியர்கள் 312 பேர், கணித ஆசிரியர்கள் 175 பேர், அறிவியல் ஆசிரியர்கள் 318 பேர், சமூக அறிவியல் ஆசிரியர்கள் 667 பேர் என 1,913 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனராம். மொத்தம் 56 ஆயிரத்து 471 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்களாம். மேலும், தற்காலிக அடிப்படையில் பணியாற்றிவந்த 40 ஆயிரம் பேரை, பணி நிரந்தரம் செய்துள்ளார்களாம். மொத்தத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாம். இதையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

           இதையும் செய்தியையும் அமைச்சர் பார்க்க வேண்டும்

சேலத்தை சேர்ந்த 57வயது பெண்ணுக்கு, அரசு பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்கான உச்சபட்ச வயது வரம்பு கடந்த 2000ம் ஆண்டில் தளர்த்தப்பட்டது. இதனால், உரிய தகுதிகளை உடையவர்கள், 58 வயதுக்குள் எந்த வயதிலும் ஆசிரியர் ஆகலாம். சமீபத்தில் நடைபெற்ற கவுன்சலிங்கில், சேலத்தைச் சேர்ந்த 57 வயது மாலதி என்பவர் பங்கேற்றார். அவர் 9 மாதம் மட்டுமே பணியாற்றுவார். அதன்பின், ஓய்வு பெற்று விடுவார். அடுத்து
நாமக்கல்லைச் சேர்ந்த 51 வயதான ராமசாமிக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அவர் ஒரு தனியார் பள்ளியில் 2 ஆண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.  இன்னும் 7 ஆண்டுகள்தான் இவரால் பணியாற்ற முடியும். இந்த மாதிரி எந்த மாநிலத்திலும் கதவை தட்டி வேலை கொடுக்க மாட்டார்கள் தற்போது படித்து விட்டு புதிதாக பதிவு செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் நாட்கள் நகர்ந்து வருடங்கள் கழித்து கொடுத்து என்ன பயன்.

0 comments: