Wednesday, September 1, 2010

யாருக்காக

சரண் அடையும் மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்களுக்கு, ரூபாய் 2 லட்சம்  தருவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. சரணடையும் போது அவர்கள் ஒப்படைக்கும் ஆயுதங்களுக்கு ஏற்ப பணம் தரப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அவரகள்  பணத்துக்காக போராடுகிறார்களா என்ன...? இல்லை தனி நாடு கேட்டு போராடுகிறார்களா...?  சொந்த மண்னில் வாழ வழியற்று, உரிமைகள் மறுக்க பட்டு, தங்களது விளை நிலங்கள் பறிக்க பட்டு, விவசாய நிலங்கள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்க படுவதால் தான் இந்த அமைப்புகள் ஆயுதமேந்தி போராடுகின்றனர். அவர்கள் பாதை தவறு தான், அவர்கள் போராட்டம் கூட அரசை எதிர்த்து தான் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் ரயில் கவிழ்ப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டு பொது மக்கள் உயிர் பலி வாங்கியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை தான். அதற்கு தீர்வாக அரசு பணம் தந்தால் மட்டும் எல்லாம் முடிந்து விடுமா என்ன...? அவர்கள் பிரச்சனை என்ன என்பதை காது கொடுத்து கேட்க எந்த அரசும் தயாராக இல்லை என்பதே உண்மை.  இது போன்ற குள்ளநரி  வேலைகளில் ஈடுபட்டு அரசு போராட்டகாரர்களை வீழ்த்த நினைப்பதை விடுத்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்குமானால் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு வேலை இருக்காது தண்டகாரண்யா, பிளாச்சிமடா, போன்ற பிரச்சனைகள் யாரால்...? ஆளும் அரசுகளால் தான் மாவோயிஸ்டுகளால் அல்ல, தன் மீது உள்ள தவுறுகளைஆளும் அரசுகள் திருத்தி கொள்ள வேண்டும். எங்கே உரிமைகள் மறுக்க படுகின்றதோ அங்கே புரட்சி வெடித்துக்கொண்டே தான் இருக்கும். என் நாடு என் மக்கள் என்று நினைக்கும் அரசியல் வாதிகள் வரும் வரை இந்த போராட்டங்கள் முற்று பெற போவதில்லை.சரண் அடையும் தீவிரவாதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கபடும் என்றும் பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3000 உதவி தொகையாக வழங்கபடும் என்று அரசு அறிவித்துள்ளது. இது போன்று முன்பே செய்திருந்தால் பல இளைஞர்கள் பாதை மாறியிருக்க மாட்டார்கள் இப்போதாவது, இது போல செயல் படுத்த முன் வந்ததே பெரிய பாராட்டுக்குரியது தான். மற்ற திட்டங்கள் போல இதிலும் அதிகாரிகள் ஊழல் செய்யாமல் இருந்தால் சரி, இல்லை என்றால் அவர்கள் பழையபடி ஆயுத பாதைக்கு சென்று விடுவார்கள் இது போன்ற நல்வழி படுத்தும் திட்டங்கள் யாருக்காக என்பதில் அரசுகள் கவனமாக இருக்க வேண்டும.

0 comments: