Tuesday, September 7, 2010

இரும்பிலே ஒரு இதயம்

மத்திய உணவுக்கழகத்தின் கிடங்குகளில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங் கள் மக்கி மண்ணாவது குறித்து உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 12ம் தேதி தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டது. மேலும் வீணாகும் இந்த உணவுதானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு விநியோகிக்குமாறும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வெறும் ஆலோசனைதான் என்றும் இதை செயல்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தார். உணவுதானியங்களை எடுத்து ஏழை மக்களுக்கு விநியோ கிப்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டியுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் பத்திரிகைகளில் வந்த பவாரின் அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்துக்கொண்டு பவாருக்கு கண் டனம் தெரிவித்துள்ளனர். “உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 12ம் தேதி கூறியது ஆலோசனையல்ல; அது ஒரு உத்தரவு என்பதை உங்கள் அமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஒருபுறத்தில் மத்திய உணவுக்கழக கிடங்கு களில் தானியங்கள் எலிகளுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் நிலையில், வறுமைக்கோடு கணக்கீட்டில் பல்வேறு மோசடிகளைச் செய்து பொது விநியோக முறைக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கும் உணவுதானிய அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. நிதிநிலை அறிக்கையிலும் உணவு மானியம் வெட்டப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்க ளுக்குத் தான் மானிய விலையில் உணவுதானியம் வழங்க முடியும் என்று வம்படி வழக்கு நடத்துகிறது மத்திய அரசு. ஆனால் அவர்களுக்கே கூட முறையாக உணவுதானியம் வழங்கப்படுவது இல்லை என்பதுதான் உண்மை. வறுமைக் கோட் டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, மேலே உள்ளவர்களுக்கும் உணவுதானியத்தை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  "நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதைப் போல், வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்?என்று பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க முடியாத நிலையில் சுமார் 77 சதவீத மக்கள் இருப்பதாக மத்தியஅரசு நியமித்த குழுவே கூறியுள்ள நிலையில், அத்தகைய வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவுதானியத் தை வழங்காமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலாவது மத்திய அரசின் வறட்டுப்பிடிவாதம் நீங்க வேண்டும். வீணாகும் உணவு தானியங்களை ஏழை-எளிய மக்களுக்கு விநியோகிக்க முன்வர வேண்டும். மேலும் முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடிகளை சலுகையாக வாரி வழங் கும் அரசு பாதுகாப்பான, நவீன உணவு கிடங்கு களை உருவாக்கி உணவு தானியங்களை பாதுகாத்து வழங்க முன்வர வேண்டும்.மத்திய அரசு நியமித்த குழு ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறது ஆனால் மன்மோகன்சிங்கோ அதற்கு மாறாக ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறார். எலிகள் திண்பதை அனுமதிக்கும் அரசு, நாட்டு மக்களுக்கு உச்சநீதி மன்றம் குட்டிய பிறகும் குடுக்க மறுப்பது  மத்திய அரசானது இரும்பிலே ஒரு இதயம் படைத்தது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

1 comments:

T. Arun Chakaravarthy said...

Central Government is doing what the WORLD BANK (American Bank) is saying.

If we avoid the rotting of food grains by distributing it to poor, the World Bank cannot give more loan to INDIA.They will loose the interest amount. So Central govt don't want to distribute food to the poor.