Sunday, August 22, 2010

கோடான கோடி

இந்தியாவில் 26 கோடியே 3 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.இவர்களில் கிராமப்புறங்களில் 19 கோடியே 32 லட்சம் பேரும், நகரங்களில் 6 கோடியே 71 லட்சம் பேரும் வசிக்கின்றனர். இது தவிர 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது
பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதுபோக, பார்லிமென்ட் நடக்கும் நேரங்களிலும், சபை கமிட்டியின் அமர்வுகள் நடக்கும் போதும், தினமும் 1000 ரூபாய் அலவன்ஸ் பெறுவர். இதுதவிர, மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு எம்.பி.,க்கும் தொகுதி அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. வருடத்திற்க்கு 30 முறை இலவச விமான பயணங்கள் மற்றும் அளவில்லா இலவச முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட ரயில் பயணங்கள், வாடகை இல்லாத வீடு, இவர்கள் செல்லும் வாகனங்களுக்கு 1 கி.மீக்கு 13ரூபாய் போன்ற சலுகைகளும் உண்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 1 வருடத்திற்க்கு ஆகும் செலவு 37 லட்சம். 37 X (552+250)802 = 2967400000  இப்படி ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில 25 பேருக்கு ஒருவேளை நல்ல உணவு கிடையாது, விவசாய விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடையாது, இன்னும் சில கிராமங்களில் அடிப்படை கூட வசதி கிடையாது, இன்னும் எவ்வளவோ இருக்கு. அத பத்தி எல்லாம் கொஞ்சமும் கவலையே கிடையாது இவர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு சம்பளம் ஒரு கேடு மக்கள் பிரச்சனை தீர இவர்கள் ஏதுவும் பாரளுமன்றத்தில் பேசுவது இல்லை மக்களுக்கு சேவை செய்வதற்கு இவர்களுக்கு எதற்கு ஊதியம்.......? அதுவும் போதாதாம் இவர்கள் எதை வெட்டி முறிக்கிறார்கள் இவர்கள் அமெரிக்காவை உதாரணமாக கூறுகிறார்கள் அவர்கள் பெறுவதோ 13000 டாலர்கள் அப்படி பார்த்தால் இங்கே 1 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு தான் அங்கே 1 டாலருக்கு இருக்கும் இவர்கள் 13000U.S.D X 47 = 611000 இந்திய ரூபாய் மதிப்புக்கு சம்பளம் கேட்கிறார்கள் உங்க கணக்குல தீய வச்சு கொளுத்த அவர்கள் 40% சதவிதம் வருமான வரியாக செலுத்துகின்றனர் ஆனால் நீங்களோ எல்லா வகையிலும் கொள்ளை, கொள்ளை, கொள்ளை, கோடான கோடி மக்கள் வரிப்பணத்தை உங்கள் சொகுசு வாழ்விற்க்கு பயன்படுத்தி கொண்டு நீங்கள்  சம்பள உயர்வு கேட்பது வெட்ககேடு. 

1 comments:

ரசிகன் said...

ஆஹா.. விஜயகாந்து படம் பாத்த மாதிரி இருக்கு. சும்மா புள்ளிவிவரங்களையெல்லாம் கொடுத்து கலக்கிட்டிங்க:)

இனி லஞ்சம் வாங்கமாட்டோம்,ஊழல் செய்ய மாட்டோம்ன்னு அவங்கெல்ல்லாம் உறுதி எடுத்துக்கிட்டா,இதை விட அதிகமா தரலாம். அதுவும் வேணும் இதுவும் வேணும்ங்கரதுதான் அவங்க புத்தி:(

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்:)