Tuesday, September 14, 2010

ஏன் பிறந்தாய் மகனே

குழந்தை இல்லாமல் இன்று பலரும் ஏங்கியிருக்க ஒரு மிருகம் பெற்ற பிள்ளையை பந்தை எறிவது போல்கொடுரமாக தரையில் ஓங்கி அடித்து கொன்றிருக்கிறான் கேரள மாநிலம் ஆம்பழப்புழா வை சேர்ந்த  மது-சுமிதா தம்பதிக்கு இரண்டு மாதத்திற்க்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு அகில் தேவ் என்று பெயரிட்டுள்ளனர் பிறந்த போதே அந்த குழந்தைக்கு பல் முளைத்திருக்கிறது இதை பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டிருக்கிறான். அவனோ பற்களுடன் பிறந்த அந்த குழந்தையால் தந்தை உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூற அதை நம்பி அந்த குழந்தையை கொல்ல முடிவெடுத்து  மது அருந்திய மது மதி கெட்டு மனைவி இல்லாத நேரம் பார்த்து ஏன் பிறந்தாய் மகனே என்று கொஞ்சம் கூட ஈவு இறக்கமின்றி தரையில் ஓங்கி அடித்து கொன்றுள்ளான். சத்தம் கேட்டு ஓடி வந்த சுமிதா அலறிதுடித்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றள்ளார்  மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர் காவல் துறைக்கு தகவல் சொல்ல இப்பொழுது மது சிறையில் பாழாய் போன மூடநம்பிக்கைக்கு இன்னும் எத்தனை குழந்தைகளின் உயிரிழக்க போகிறதோ....? சென்ற மாதம் அப்துல் கபூர் என்ற கொடூரன் ஒரு குழந்தையை மூட நம்பிக்கைக்கு பலியாக்கிகனான் இப்பொழுது மது என்ற கொடூரன். என்றைக்கு தான் இவர்கள் திருந்த போகிறார்களோ....?

2 comments:

ராசராசசோழன் said...

இரக்கம் என்பதை கேள்வி பட்டிருக்கா த ஜென்மங்கள்...

ஆனந்தி.. said...

சே..என்னப்பா இது...மூட நம்பிக்கை பாசத்தை,அன்பை,உணர்வை எல்லாம் மழுங்கடிக்குதா??சே..வெரி bad !!