Thursday, September 30, 2010

உனக்கென நான் எனக்கென நீ

அயோத்தி இட சர்ச்சை தொடர்பான வழக்கில் இன்று 30ஆம் தேதி தீர்ப்பு வெளியாகிறது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பினை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரித்தாளும் கலையில் தேர்ந்தவர்களான பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் பிரச்சனையை துவக்கி வைத்தனர். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ராமர் கோவில் இருந்ததா என்ற சர்ச்சை தொடர்பான வழக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனிடையே ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் இதை தனது மதவெறி நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. அத்வானியின் ரத யாத்திரையின் தொடர்ச்சியாக கரசேவை என்ற பெயரில் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்தப் பிரச்சனையை இடியாப்பச் சிக்கலாக்கியதில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசுகளுக்கு பெரும் பங்கு உண்டு. எனவே இப்போது அந்தக்கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பேச்சுவார்த்தை மூலம் பிரச்ச னைக்கு தீர்வு காண முயலும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.

நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான வழிமுறையை யோசிக்குமாறு உச்சநீதி மன்றத்தின் தனி நீதிபதி யோசனை கூறிய நிலையில், வழக்கோடு தொடர்புடைய யாரும் அதற்கு தயாராக இல்லை. நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே அவர்களது நிலையாக இருந்தது. நீண்ட நெடுங்காலமாக இழுத் தடிக்கப்படும் இந்த வழக்கில் தீர்ப்பு வரவேண்டும், தீர்ப்பினால் பாதிக்கப்படும் தரப்பு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது என்பதே மதச்சார்பற்ற சக்திகளின் கருத்தாக இருந்தது.

அயோத்தி இட உரிமை தொடர்பான வழக்கு தான் இது. பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கில் அத்வானி உள்ளிட்ட சங்பரி வாரத் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள னர். அந்த வழக்கும் தொடர்ந்து முடக்கப்பட்டு வரு கிறது. அந்த வழக்கையும் விரைந்து விசாரித்து குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பல நூறு வருடங்களாக சகோதரர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் உனக்கென நான் எனக்கென நீ என்று இருந்து வரும் நிலையில் அயோத்தி இட சர்ச்சை வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அமைதியையும் நல்லிணக் கத்தையும் நிலைநாட்டுவது இந்தியர்கள் அனைவரது பொறுப்புமாகும்.

மேலே உள்ள புகைபடம் ஒரு நாளிதழில் வெளிவந்தது இதற்கு விளக்கம் தேவை இல்லை அந்த சிறார்களுக்கு இருக்கும் மனபான்மை இந்தியர் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதே ஒரு உண்மையான இந்தியனின் விருப்பம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

3 comments:

ஆனந்தி.. said...

நாம் அனைவரும் சகோதர-சகோதரிகள்!!உண்மையான அன்புக்கு இனம்,மதம் தேவை இல்லை..இதை உணர்பவர்கள் உணருவார்கள்..

ஆயிரத்தில் ஒருவன் said...

தளத்தை பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி ஆனந்தி

அருள் said...

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.